ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

இயற்கை தந்த அருமருந்து

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என்ற இரு வகைகள் இருக்கின்றன. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும். நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம்.

  • குடற்புண்களை ஆற்றும்.
  • வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.
  • மார்புச் சளியை போக்கும்.

குடற்புண்க்கு சுண்டைக்கா

நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், சுண்டைக்காய் போக்கி விடும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன் கறிவேப்பிலை, மிளகு சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க மூலக் கிருமி மலத்துவாரத்தில் பூச்சிக்கடி போன்றவை நீங்குகிறது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊற வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். மார்புச் சளியை போக்கும். உடலில் உள்ள கசடுகளை நீக்கி நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட நீரிழிவு நோயினால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த சுண்டைக்கா

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, மூலச்சூடு, இருமல், மூலம் போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்குகிறது. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்குகின்றன.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டு வரலாம். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வர வயிற்றுக் கிருமி மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப் புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள் குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

உடல் வளர்ச்சிக்கு சுண்டைக்கா

சுண்டைக்காயில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம் அதிகம் நிறைந்துள்ளதால் உடல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடைகிறது. உடல் சோர்வு நீங்குகிறது. பச்சையாக பறித்து தொக்கு கூட்டு செய்து சாப்பிடலாம். சுண்டைக்காயின் பெருமை பற்றி கூறப்பட்டுள்ளன.

சுண்டைக்காயின் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் உள்ளன. சுண்டைக் காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. நீண்ட ஆயுளைத் தருகிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *