Videosசினிமா

நன்றி தெரிவிக்கும் எம் குமரனின் அம்மா நதியா

நடிகை நதியா இந்த வயசுலையும் அழகு இப்படி அழகா எப்படித்தான் மெயின்டெய்ன் பண்றாங்கன்னு தெரியல.

1994 வரை முன்னணி கதாநாயகியாக நடித்த இவர் 2004இல் திரை உலகிற்கு ரீ-என்ட்ரி தந்தார். நடிகர்கள் எப்பொழுது நடித்தாலும் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரை உலகில் ரீ-என்ட்ரி கொடுத்த நதியா சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் அருமையான சப்போர்ட் அளிப்பவர்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தைரியமான தாயாக நடித்த இவர் பல குழந்தைகளுக்கு இப்படி ஒரு தாய் அமைய மாட்டாளா என ஏங்கும் அளவிற்கு நடித்திருப்பார் நதியா. சமீபத்தில் நாம் அறக்கட்டளை தயாரிப்பில் ஸ்ரீ ராஜா ரவி வர்மாவின் ஓவியத்தை ஒப்ப ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. சுஹாசினி மணிரத்தினம் அவர்களின் க்ரியேட்டிவ்நஸுடன் அருமையாக அமைந்தது.

இன்ஸ்டாகிராமில் சிம்ப்ளி நதியா என்னும் பேரில் இருக்கும் இவரது அக்கவுண்டிற்கு ஒரு லட்சம் ஃபாலோயர்ஸ் வந்துள்ளனர். இதனையொட்டி நதியா தனது ரசிகர்களுக்கு காணொளி மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

வீடியோவில் கண்ணாடி அணிந்த டீச்சர் போன்ற தோரணையில் பட்டையை கிளப்பியுள்ளார் நதியா. 

நன்றி தெரிவித்தமைக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *