செய்திகள்தேசியம்

ஐநா சபையில் மோடி பேசும் பாதுகாப்பு

ஐக்கிய சபையின் ஐநா பொதுச் சபையின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கின்றார். ஐநா பொதுச் சபையின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச இருக்கின்றார். அப்போது அமைதி பாதுகாப்பு நிலைப்பாடு தொடர்பாகப் பேச உள்ளார்.

பொது சபை கூட்டத்தில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர் பங்கேற்க உள்ளார். ஐநா சபையின் டைமண்ட் ஜுபிலி கொண்டாட்ட விழாவானது 75 ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தையொட்டி நடைபெறும் கூட்டத்தில் மோடி அமைதி, பாதுகாப்பு குறித்து பேசி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐநா சபை இரண்டாம் உலகப்போருக்கு பின்பு தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உலகத்தின் அமைதி பரஸ்பர பாதுகாப்பு நாடுகளுக்கிடையேயான நல்வரவு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகஸ்ட் 14, 1941 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1941இல் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஐநா சபையில் முதல் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. ஆண்டு ஐநா சபையானது பொதுச்சபை பாதுகாப்புச் சபை பொருளாதார சமூக சபை பொறுப்புக்கூறும் பன்னாட்டு நீதிமன்றம் செயலகம் ஆகிய அமைப்புகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. பொதுச்சபை வருடத்திற்கு இரண்டு முறை கூடுகின்றது. சிறப்பு மிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் வரும் 21 ஆம் நாள் இரு அமர்வுகளில் மோடி பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா முக்கிய மிகப் பெரிய ஜனநாயக நாடாகப் பங்கு வகித்து வருகின்றது. 1950, 51 ஆம் ஆண்டு முதல் ஏழு முறை ஐநா சபையின் பாதுகாப்பு குழுவில் நிரந்தரம் அல்லாத உறுப்பினர் பதவி குழுவில் பதவி வகித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐநா பொதுச் சபையில் 193 உறுப்பு நாடுகள் இருக்கின்றன ஐநா பொதுச்சபையில் 2022ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராகவும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியா ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *