செய்திகள்தமிழகம்

சென்னையில் பாதுகாப்பு வழிமுறையுடன் மெட்ரோ ரயில் செப்டம்பர் 7 முதல் இயங்கும்

மெட்ரோ ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான குறியீடுகளை பயணிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். மெட்ரோ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளன. பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம். உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒவ்வொரு மெட்ரோ நிறுத்தத்தில் மெட்ரோ ரயில் 50 வினாடிகள் நின்று செல்லும். இதுவரை 20 வினாடிகள் மட்டுமே நின்று சென்று வந்த நிலையில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொறுமையாக மெட்ரோ ரயில்களில் எதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் ஏழாம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கான விரிவான பாதுகாப்பு வழிமுறைகளும் இவ்வாறு அறிவிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் ஏழாம் தேதி தொடங்குகின்றன. சின்ன மலையிலிருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான சேவை செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்குகிறது. பிக்அப் அவர்ஸ் எனும் மெட்ரோ பயணிகள் அதிகமாக வரக்கூடிய நேரங்களில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவையும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *