சினிமா

பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் கோலிவுட் முழுக்க எனக்கு எதிராக இருந்தது. பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் இருக்கிறேன். தமிழகம் ஏன் என்னை பற்றி பேசுகிறது என்று எனக்கு புரியவில்லை. ஏன் என் பின்னாலேயே இருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேலையே இல்லையா என கேட்டுள்ளார். நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கும் பதிவு நெட்டிசன்களை காண்டாகி இருக்கிறது.

இதில் தமிழகம் என்னை புறக்கணித்து விட்டதற்காக ரொம்ப நன்றி. இதனால் தான் நேஷனல் அளவிலும், இன்டர்நேஷனல் அளவிலும் சூப்பர் மாடலாக இருக்க முடிந்தது என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட், கோலிவுட் நடிகைகள் மற்றும் நடிகர்கள் என யாரையும் விட்டுவைப்பதில்லை மீரா மிதுன். சமீபத்தில் நடிகை திரிஷா ஷேர் செய்த போட்டோ பார்த்து காப்பி அடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது கடைசியாக இருக்கட்டும் என்று எச்சரித்துள்ளார். இவருக்கு என்ன பிரச்சினை என்றாலும் பிரதமர் மோடியிடம் புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

சினிமா நட்சத்திரங்கள் ஒரு போட்டோவை ஷேர் செய்தால் போதும். அது தன்னைப் பார்த்து அடித்த காப்பி தான் என வரிந்து கொண்டு குற்றம் சாட்டி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மீரா மீதுன்.

தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வாங்கி கட்டி வருவதை வேலையாக வைத்துள்ளார். ஏதாவது ஒன்றை பேசிய போது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர். தன்னை கோலிவுட் புறக்கணித்ததால் தான் தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இருப்பதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்திருக்கிறார்.

தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டங்கள் ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர். அளந்து விடும் பிக்பாஸ் பிரபலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *