ஆரோக்கியம்ஆலோசனைமருத்துவம்வாழ்க்கை முறைவிழிப்புணர்வு

அதிக உதிரப்போக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்த..

பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறுவது உண்டு . பெண்ணின் பெருமையை பாடுவதற்கும் புகழ்வதற்கும் பல காப்பியங்கள் உண்டு எல்லா காப்பியங்களிலும் பெண்ணை பற்றி பெருமையாகவும் மிக உயர்த்தியும் கூறுகின்றனர் . மங்கையராக பிறப்பதற்கு நல்ல மானிடம் செய்திட வேண்டும் என்று நமது அவ்வையார் பாடியிருப்பார்.அவரின் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை பெண் வெறும் மனதால் மட்டும் இப்பொழுது எல்லாம் புண்படுவதில்லை உடல் அளவிலும் மிக அதிகமாக காணப்படுகிறாள் மற்றவர்களால் ஏற்படும் காயங்களை காட்டிலும் அவள் உடம்பே அவளுக்கு எதிரியாக மாறி விடுகிறது.

நாம் பெண்கள் மாதவிடாய் பிரச்சனை என்பது மிகப்பெரிய ஒரு சவாலாகும் பெண்களுக்கு மாதவிடாய் சரியான முறையில் இல்லையென்றால் அவள் மிகப்பெரும் பிரச்சனைகளை சந்திக்கிறாள் அவள் ஏற்படும் இந்த பிரச்சினை அவளின் தாய்மை வரை பாதிக்கிறது எப்படி இருக்கையில் ஒரு சிலருக்கு மாதவிடாயில் பிரச்சனை ஏற்படுகிறது உதிரப்போக்கு அதிகமாக சில பெண்களுக்கு இருக்கும் அப்படி இருக்க காரணம் என்னவென்று தெரிந்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும்.

அதிக உதிரப்போக்கு ஏற்பட காரணம்

அதிக உதிரப்போக்கு ஏற்படுவதன் காரணம் என்னவென்றால் நமது உடலில் சமநிலை சராசரியாக இல்லை என்றால் ஏற்படுகிறது.

நாம் உணவில் அதிகமான காரம் அதிகமான உப்பு புளிப்பு ஆகியவற்றை சேர்ப்பதன் மூலமும் மாதவிடாய் கோளாறு ஏற்படுகிறது

நம் உடலின் வெப்பம் காரணமாகவும் மாதவிடாய் பிரச்சனை ஏற்படுகிறது எனவே வெப்பம் அதிகரிக்கும்படி எதையும் செய்யாமல் இருக்க வேண்டும்

ரத்தத்தின் அளவு சீராக இல்லாதபோதும் இத்தகைய பிரச்சனை ஏற்படுகிறது நமது உடலின் ஹீமோகுளோபின் லெவல் கண்டிப்பாக சீராக இருக்க வேண்டும்

உதிரப்போக்கு அதிகமாக ஏற்படும் போது நமக்கு அதிக கோபம் ஏற்படும் இதனால் பல பிரச்சினைகளை நீங்கள் சந்திப்பீர்கள்.

மேலும் படிக்க : ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு செய்ய வேண்டியவை

அதிக உதிரப்போக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்த

அதிக உதிரப்போக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு கீழ்கண்ட முறையில் நீங்கள் பின்பற்றினால் போதும் உங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைக்கு விடுதலை கிடைக்கும் 0

50 மில்லி லிட்டர் வாழைப்பூ சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 50 மில்லி லிட்டர் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது 50 மில்லி லிட்டர் மோர் ஆகியவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை கலந்து நீங்கள் தினமும் குடித்து வர உங்களுக்கு ஏற்பட்ட மாதவிடாய் பிரச்சனை நீங்கும் அதிக உதிரப்போக்கு ஏற்படுவது கூடிய விரைவில் நின்றுவிடும்.

வாழைப்பூ சாறு நம் உடலில் உள்ள சூட்டை தணிக்க மிக உதவியாக உள்ளது மேலும் புரோட்டின் நம் உடலில் இருந்து வெளியேறுவதை இது கட்டுப்படுத்துகிறது.

வாழைப்பூ சாற்றை தினமும் குடித்து வர நம் உடலில் இது progesterone என்ற ஹார்மோன் சிறப்பை அதிகரிக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *