சினிமா பாடல்கள்

மனம் கொத்திக் பறவை படம் பாடல் வரிகள் ஊரான ஊருக்குள்ள….

மனம் கொத்திப் பறவை, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை இயக்கிய எழில் ஆவார்.[2] முக்கிய கதாபாத்திரங்களில் சிவ கார்த்திகேயன், சூரி, இளவரசு, ஆத்மியா ஆகியோர் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆ ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரம் கூட
ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்னை மட்டும் தீண்டவே இல்ல
உன்ன உத்து பார்த்த
கண்ணுரெண்டும் தூங்கவே இல்ல (ஊரா)

காணமே காண வெச்ச
கண்ணுக்குள்ள தீய வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் பார்க்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேட்கவே இல்ல
பேசாம பேச வெச்ச
பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்னை மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்க
கூட சேரும் ஆசையே இல்ல

குழு ஊன… ஊன… ஊன… ஊன…

ஆ கூவாம கூவ வச்ச
கொண்டையிலே பூவ வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் சூடவே இல்ல – அய்யோ
தொலைஞ்சி போன ஆளை நீயும் தேடவே இல்ல
மூடாம மூடி வெச்ச
முந்தானையில் சேதி வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் மூடவே இல்ல
காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல
கள்ளி காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல

பெ ஊரான… ஊரான

ஆ ஊரான ஊருக்குள்ளே
உன்னை போல யாருமில்ல
ஆணா நீ என்னை மட்டும் சேரவே இல்ல

பெ தானாவே உன்னை வந்து சேருவா புள்ள

ஆ கொஞ்சம் நேரம் கூட
ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான… ஊருக்குள்ள…
உன்னை உத்து பாத்த கண்ணு ரெண்டும்
தூங்கவே இல்ல

பெ கொஞ்சம் நோகா கண்ணை மூடி
தூங்கு மாப்பிள்ளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *