செய்திகள்தமிழகம்

விநாயகர் சதுர்த்திக்காக மதுரை உயர்நீதி மன்றத்தில் அதிரடி மனுத்தாக்கல்

கொரோனா தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய சூழலில் தமிழகத்தில் தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டும் பொதுமக்களின் பங்கேற்பு இன்றி உரிய பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி 5 சிலைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி அளிக்க பல்வேறு அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

இந்த வருடம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஆகஸ்ட் 21 மற்றும் 22ம் தேதி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். இதில் ராஜபாளையம் அருகே தர்மாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் கடந்த 32 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்று வந்தது.

எதிர்பாராதவிதமாக முழுவதும் நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலையை நிறுவி வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளன.

ராஜபாளையம் தர்மபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி முதலாம் நாள் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம், ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்படும்.

மேலும் 25 ஏழை எளியோருக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறும். விநாயகர் சதுர்த்தி நாள் 5 ரத்துடன் விநாயகர் ஊர்வலம் நடைபெறும்.

தினந்தோறும் ஆறாயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடத்த எவ்வாறு அனுமதி கொடுக்க முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில் விநாயகரை வைத்து வழிபடுவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டன.

இச்சூழலில் மனுதாரர் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கிறார். இதில் எவ்வாறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதிக்க முடியும்? இதனால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் அல்லவா? இதுபோன்ற சூழலில் இந்த தேவை இல்லாத ஒன்று.

இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரங்களை வீணடிக்க வேண்டாம். இந்த மனுவிற்கு அவசரமும் கிடையாது. எனவே மனுதாரர் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றம் அபராதம் விதிக்க நேரிடும் என தெரிவித்தார். தொடர்ந்து மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *