சமையல் குறிப்புமருத்துவம்

உடலுக்கு தேவையான வலுவை தரும் ஓரிதழ் தாமரை..!!!

நம்மில் எத்தனை பேர் நலமாக உள்ளோம்? நல்ல உணவுகளை சாப்பிடுகிறோம். சம்பாதித்து சேமிப்பது எதற்காக? இந்த கொரானாவில் பல பேர் பல பாடங்களை கற்றுள்ளோமா? இனியாவது நம் சந்தோசத்திற்கு, குடும்பத்திற்கும் நேரத்தையும், பணத்தையும் மிச்சம் பண்ணாமல் செலவிட்டு ஆரோக்கியமாக வாழ கற்று கொள்வோமா.

மனித உடலில் ஏற்படும் தோல் வியாதிகளில் படர்தாமரை யும் ஒன்று. படர்தாமரையை போக்க அருகம்புல், மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி காய வைத்து கழுவி வர நாளடைவில் மறைந்து விடும். தலை முடி நரைத்து விடுவது வயது வரம்பு இன்றி அனைவர்க்கும் ஏற்படும் பெரும் பிரச்சனையில் இதுவும் ஒன்றாக உள்ளது. மருதோன்றி, நிலவாரை என்பதை சேர்த்து இடித்து நீர்விட்டு அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது இதற்கு தீர்வாகும்.

காயகல்பம்

ஓரிதழ் தாமரையை காயகல்பம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். சமூலத்தை இருபத்தி ஒன்று நாட்கள் வெறும் வயிற்றில் ஐம்பது மிலி சாப்பிட்டு ஆட்டு பால் குடித்தால் இழந்த ஆண்மை சக்தியை பெற முடியும். ஆண்களுக்கு ஏற்படும் வெள்ளையொழுக்கு, அடிவயிற்று வலியை போக்க இந்த சமூலத்தை வேர் முதல் பூ வரை அரைத்து சுண்டக்காய் அளவு பசும்பாலில் கலந்து வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட சரியாகும்.

ஓரிதழ் தாமரை

உடல் இளைத்து சோர்வாக இருப்பவர்கள், தாது இழந்ததை திரும்ப பெறவும் பசும்பாலில், தேன், ஓரிதழ் சேர்த்து இரவு படுக்கும் முன் குடித்து வர இழந்த தாதுவை பெற்று உடல் வலுவாகும். இளம் வயதில் ஆண்பிள்ளைகளுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவதால் ஏற்படும் இந்த தாது இழப்பை சரிசெய்கிறது. இரைப்பு நோய்க்கும், காய்ச்சலுக்கும், ஓரிதழ் சமூலத்தை கசாயமாக செய்து பருகலாம்.

தாமரை சமூலம், கோரோசனை, பச்சை கற்பூரம், பசுவின் நெய்யுடன் சேர்த்து மேகவெட்டை நோயால் பாதித்தவர்கள் தாக்கிய பகுதியில் பூசலாம். புண்களின் மீது தடவி வர விரைவில் குணமடையும். ஓரிதழ் தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டு, பசும்பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நோய் தாக்கத்திலிருந்து விடுபட்டவர் களுக்கு உடல் தேற ஓரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.

மருத்துவ குணம்

ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்ந்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை அருந்துவதால் உடல் வலு பெறும். இதன் இலை, பூ, வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்து இருக்கிறது. ஆசிய நாடுகளில் அதிகப்படியாக காணப்படும். இது நிலத்தில் வளரும் சிறு செடிவகையை சேர்ந்தது. இந்த ஓரிதழ் தாமரை மருத்துவ குணம் நிறைத்த செடியாக உள்ளது.

மேலும் படிக்க

வயிற்றுக்கு செய்யும் பயறுகளின் வைத்தியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *