ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

சுக்கிரனின் அருள் பெற, இந்த ஒரு மந்திரம் போதும்…

நம் ஜாதகப்படி ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு இராசி அதிபதிகள் இருப்பர். ராசி அதிபர்களின் இடமாற்றத்திற்கு தகுந்தவாறு நம் வாழ்வில் அனைத்தும் நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் ஒவ்வொரு ராசி அதிபதக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது. அதில் சுகபோக வாழ்விற்கு அதிபதி சுக்கிர பகவான் என்பர். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றால் ஆடம்பர வாழ்வு அமையும் ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3 ,6 ,8 ,12 ராசிகளில் அமைந்தால் யோக பலன்களையும் இதற்கான பரிகாரம் செய்ய வாழ்வு மேம்படும்.

வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றி மகாலட்சுமிக்கு வெண்பொங்கல் வெள்ளை மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து ஸ்ரீ லட்சுமி துதி, மகாலட்சுமி அஷ்டகம், 108 போற்றி சொல்லி வழிபடலாம். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நமக்கு சுக்கிரபகவான் நன்மைகளைக் கொடுப்பார்.

சுக்கிரனுக்கு உகந்த பூஜைகள்

சுக்கிரனுக்கு உகந்த பூஜைகளான பௌர்ணமி பூஜை, சுவாசினி பூஜை, குமாரி பூஜைகளை செய்வது அல்லது பங்கேற்பதும் நமக்கு நன்மை அளிக்கும்.

சுக்கிரனுக்குரிய மந்திரத்தை பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தன்று அல்லது வெள்ளிக்கிழமையிலோ 108 முறை சொல்வது மிக நல்லது.

மந்திரம்

“ஹிம்குந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரு சர்வ சாஸ்தர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணாமம் யஹம் “

பனித்துளி முல்லை தாமரை போன்ற மலர்களை போல வெண்ணிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாக திகழ்பவரே! சாஸ்திர ஞானத்தில் வல்லவரே பிருகு முனிவரின் புதல்வரே! சுக்கிர பகவானே உம்மை போற்றுகிறேன்.

இப்பாடலை சுகபோக வாழ்வு தரும் சுக்கிர பகவானை நினைத்து மேல் குறிப்பிட்ட நாட்களில் பாடிவர உங்களுக்கு நன்மையே நடக்கும் வாழ்வின் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்கும். வாழ்வில் வெற்றி கிடைக்கும். துன்பம் நீங்கும்.

மேலும் படிக்க : வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *