ஆன்மிகம்ஆலோசனை

வாழ்வில் திருப்பம் தரும் திருப்புகழ் படிப்போம்!

திருபுகழ் முருகபெருமானின் அருள் பெற்று பிறப்பற்ற வாழ்வை அடைய நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். முருகப் பெருமான் அருளாள் இந்த திருபுகழனாது இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் கடந்த நிலை அடைய திருப்புகழ் படியுங்கள் திருப்புகழ் பாடல் தினந்தோறும் படித்தால் நம் வாழ்விற்குத் தேவையான வழங்கள் பெறலாம்.

விநாயர் துதியுடன் திருப்புகழ் தொடங்குகின்றது அதனை இங்கு கொடுத்துள்ளோம். படித்து முருகப் பெருமான அருள் பெறுவோம்.

திருப்புகழ் பாடல் 1

தந்தன தனதன தந்தன தனதன
     தந்தன தனதன …… தனதான

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக …… னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை …… கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய …… மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே (தி 1)

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய …… முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த …… அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை …… இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் …… பெருமாளே.

கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே,

மேலும் படிக்க ; திருப்புகழ் 159 சீறல் அசடன் (பழநி)

நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே,

என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும்.

ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே, (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.

திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.

மேலும் படிக்க ; வாழ்வின் பொருளை உணர்த்தும் விளக்கு ஒளி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *