செய்திகள்தமிழகம்

சரக்கு விலை உயர்வு…! அதிர்சியில் மதுப்பிரியர்கள்…

தமிழ்நாட்டில் இன்று முதல் மதுபானங்களின் விலை அதிகரிப்படுவதாக வெளியான தகவலால் மதுப்பிரியார்கள் அதிர்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பான வெளியான தகவலில், குவாட்டர் ஒன்றுக்கு (சாதாரண ரகங்களுக்கு) 10 ரூபாய் வீதமும், உயர் ரகங்களுக்கு 20 ரூபாய் வீதமும் மதுபான விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஃப் பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வீதம் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 2 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு மிகுந்த வருத்தம் அளிப்பதாக மதுப்பிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *