செய்திகள்

அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்:- இந்தியா கண்டனம்..!

நியூயார்க்கில் உள்ள மகாத்மா காந்தி சிலை அடையாளம் தெரியாத சிலரால் சேதமானதாக நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று நியூயார்க் நகர சுற்றுப்புறத்தில் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை சேதப்படுத்தப்பட்டது. இது மிகவும் இழுவான செயல் என இந்திய தூதரகம் தனது கடுமையான்ம கண்டனத்தை தெரிவித்துள்ளது. மன்ஹாட்டன் யூனியன் சதுக்கத்தில் அமைந்துள்ள 8 அடி உயர சிலை, சில அடையாளம் தெரியாத நபர்களால் சிதைக்கப்பட்டதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

“இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் நாசகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வெளொயுறவுத்துறையிடம் இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *