செய்திகள்தமிழகம்தேசியம்வாழ்க்கை முறைவாழ்வியல்

சுதந்திர வீரர் மகாத்மா காந்தி பற்றிய ஒரு பார்வை

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தரில் ஆச்சாரமான குடும்பத்தில் 1869ஆம் வருடம் பிறந்தார். பன்னிரண்டாம் வயதில் அரிச்சந்திரா நாடகம் பார்த்து பெரும் மாற்றத்தை இவருக்கு ஏற்படுத்தியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் மன உறுதியால் தாங்கிக் கொண்டு அரிச்சந்திரன் நாடகத்தில் சொன்னதை கேட்டு, ‘உண்மையை மட்டுமே பேசும்’ புதிய மனிதராக மாறியவர் காந்தி.

  • ‘உண்மையை மட்டுமே பேசும்’ புதிய மனிதராக மாறியவர் காந்தி.
  • உலகிலேயே முதன்முறையாக அகிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.
  • இந்தியாவுக்கு கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் காந்தியால் கிடைத்தது.

காந்தியின் நேர்மை மற்றும் மன உறுதி

வெளிநாடுகளில் படிக்க சென்ற போதே கடுமையுடன் மரணப் போராட்டம் நடத்திய போதும் நேர்மை மற்றும் மன உறுதி எப்போதும் கைவிட்டதில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு வழக்கறிஞராக கோர்ட்டுக்கு கொண்டு சென்ற வழக்குகளை விட வெளியே பேசித் தீர்த்து வைத்த வழக்குகள் அதிகம்.

காந்தியின் அகிம்சை போராட்டடம்

அடக்குமுறையும், நிறவெறியும் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போது காந்தியை ஒரு போராட்ட காரராக மாற்றின. வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதன்முறையாக அகிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்தியவர். அதை விட எதிரியின் முன் உறுதியுடன் நின்று சாத்வீகமாக போராடுவது உண்மையான வீரம்.

காந்தியின் போராட்டத்தின் வெற்றி

எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே. வன்முறை அல்ல என்ற அகிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும், கேலியும் செய்தார்கள். இக்கோட்பாடு தான் சிதறிக் கிடந்த இந்திய சுதந்திரத்தை ஒன்று சேர்த்து வலிமை ஆக்கின. போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழுந்த போது மன உறுதியுடன் போராடினால் வெற்றி கிடைக்கும் என்பது உறுதியுடன் சொன்னார்.

சுதந்திரப் போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் இணைந்தனர். காந்தி தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் உப்புக்கு வரி போட்டு ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து தண்டி யாத்திரையை தொடங்கினார். 1930 ஆம் வருடம் 24 நாட்களில் 241 மைல் தூரத்தை கடந்த காந்தி, ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார்.

ஆங்கிலேயர்கள் பார்த்த காந்தி

பல்வேறு தலைவர்கள் தலைமையில் நாடெங்கும் நடந்த இப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதையும் கண்டு மலைத்து மன உறுதியுடன் நிற்க, காந்தியைப் பார்த்து ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள். இந்தியாவுக்கு கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது.

போராட்டத்தை தொடர்ந்த காந்தி

காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் 1947ஆம் வருடம் சுதந்திரம் கிடைத்ததை தொடர்ந்து, தலைமைப் பொறுப்பு தேடி வந்தன. இதை ஏற்காமல் தீண்டாமை, ஏழ்மை, மதக்கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.

78 ஆம் வயதில் மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் நாதுராம் விநாயக் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 120 வயது வரை வாழ்ந்தால் தான் நினைத்ததை முடித்திருக்க முடியும் என்று நினைத்தார் காந்தி. காந்தி மறைந்த பிறகும் மன உறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ? அங்கெல்லாம் வெற்றி உருவத்தில் அவரை தரிசிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *