செய்திகள்தமிழகம்தேசியம்

கலப்படத்தால் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்! உஷார் மக்களே..

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடிய ஒரு பொருள் தேன். ஆனால் இந்த தேனில் கலப்படம் இருப்பதாக பல்வேறு நிறுவனங்கள் மீது வந்த புகாரின் பேரில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. தேனில் சர்க்கரை பாகு சேர்த்து இருப்பதாக கூறப்படுகிறது. தொற்று நோய் பரவி வரும் நிலையில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் குணம் தேனுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. நாட்டு மருந்துகளும், இனிப்பு பதார்த்தங்கள் செய்வதற்கும் தேன் உபயோகிக்கலாம்.

  • 13 முன்னணி பிராண்டுகளின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேன் என்எம்ஆர் சோதனை.
  • மூன்று நிறுவனங்கள் தயாரித்த தேன் கலப்படமற்ற தேன்.
  • சர்க்கரைப் பாகு கலந்த தேனை உண்ணும் போது உடலுக்கு ஆரோக்கியம் இல்லை.

சர்க்கரைப் பாகு கலந்த தேனை உண்ணும் போது உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். சிஎஸ்இ கூறிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தையும், கண்டனங்களையும் பலரும் பதிவு செய்து வருகின்றனர்.

முன்னணி பிராண்டு

டாபர், பதஞ்சலி, பைத்தியநாத், ஜன்டு போன்ற 13 முன்னணி பிராண்டுகளின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேன் என்எம்ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

தேன் கலப்படம் உறுதி

அபிஸ் ஹிமாலயா, ஹை ஹனி, சண்டு, டாபர், பதஞ்சலி உள்ளிட்ட 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரைப்பாகு கலந்திருப்பதாக சிஎஸ்இ ன் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சு குழுவின் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தேன் கலப்படமற்ற பிராண்டு

சொசைட்டி, நேச்சுரல், மார்க்பெட் சோனா, சபோலா  மூன்று நிறுவனங்கள் தயாரித்த தேன் கலப்படமற்ற தேன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *