சினிமாசினிமா பாடல்கள்

குழலூதும் கண்ணனுக்கு…பாடல் வரிகள்

மெல்லத் திறந்தது கதவு (Mella Thirandhathu Kadhavu) 1986ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்க மோகன்ராதாஅமலா மற்றும் செந்தில் போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் வசூலில் சாதனை படைத்தது.

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ

என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா…இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ மலக்காத்து வீசுற போது மல்லிகப்பூ பாடாதா மழை மேகம் கூடுற போது வண்ண மயில் ஆடாதா மலக்காத்து வீசுற போது மல்லிகப்பூ பாடாதா மழை மேகம் கூடுற போது வண்ண மயில் ஆடாதா

மேலும் படிக்க : கருப்பு தான் எனக்கு…வெற்றி கொடி கட்டு

எம் மேனி தேனரும்பு எம்பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் மெட்டெடுப்பேன் உன்னத்தான் கட்டி வைப்பேன் சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளய்யா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா…

கண்ணா உன் வாலிப நெஞ்ச எம் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா கண்ணா உன் வாலிப நெஞ்ச எம் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான் பூவான பொண்ணுக்குத்தான் இராவானா வேதனதான் மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம் படும் பாடு கேளையா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோச போட்டி போடுதா…

இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ

மேலும் படிக்க ; ரகிட ரகிட ! ரகளையாக முனுமுனுக்கச் செய்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *