ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

Kantha sashti vratham 2023: கந்த சஷ்டி விரதம் 2023 இரண்டாம் நாள் விரதம் தொடங்கும் தேதி மற்றும் படிக்க வேண்டிய பாடல்

கந்த சஷ்டி விரதம் என்று அழைக்கப்படும் மகா கந்த சஷ்டி விழா இரண்டாம் நாளில் பாட வேண்டிய பாடல்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலன்களை தரும் கந்த சஷ்டி விரதம் இரண்டாம் நாளில் விரதம் இருப்பவர்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் கணவனின் ஆயுள் அதிகரிக்கும்.

கந்த சஷ்டி விரதம் என்பது முருகன் மேல் பற்று கொண்ட பக்தர்கள் முருகனுக்காக விரதம் இருந்து தாங்கள் நினைக்கும் காரியங்கள் நிறைவேற வேண்டும் என்று முருகனிடம் வேண்டி வணங்கும் விழாவாக கருதப்படுகிறது. தன் மீது பற்று கொண்ட பக்தர்கள் தனக்காக விரதம் இருந்து வணங்கும் பொழுது அவர்கள் வேண்டும் வரங்களை முருகப் பெருமான் தருகிறார். தீராத கடன்கள் குழந்தை வரம் தீர்க்க சுமங்கலி பாக்கியம் தீராத நோய்கள் தீர போன்ற பல பிரச்சனைகளுக்கு கந்த சஷ்டி விரதம் ஒரு தீர்வாக உள்ளது.

மாதத்தில் ஒரு நாள் கந்த சஷ்டி வருகிறது அந்நாளில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் கோவில்களில் நடைபெறுகிறது. மாத மாதம் விரதம் இருப்பவர்களும் உண்டு. மாதம் தோறும் விரதம் இருக்க முடியாதவர்கள் மகா கந்த சஷ்டி விழா அன்று விரதம் இருப்பது மிகுந்த பலன்களை தேடி தரும். கந்த சஷ்டி விழா 2023 இரண்டாம் நாள் இந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது கந்த சஷ்டி விழா 2023 செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்கள் கணவரின் ஆயுள் நீடிக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரித்து குடும்பத்தில் சண்டைகள் இல்லாமல் சிறந்த தம்பதிகளாக வாழ்வீர்கள்.

கந்த சஷ்டி விரதம் 2023 இரண்டாம் நாள் அருணகிரிநாதர் அருளிய மயில் விருத்தம் பாடலை பாடி முருகரை வழிபட வேண்டும் கந்த சஷ்டி விரதம் இரண்டாம் நாள் விரதம் இருப்பவர்கள் பாட வேண்டிய மயில் விருத்தம் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது என்று உச்சரித்து முருகப்பெருமானை மனதார வழிபடுங்கள்.

மேலும் படிக்க : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 283 பூசலிட்டு (திருத்தணிகை)

1.சந்தான புஷ்பபரி

சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
   சரணயுக ளமிர்தப்ரபா

சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
   சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
   யம்பக விநாயகன்முதற்

சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
   சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
   வனசரோ தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
   வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
   இகல்வேல் விநோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
   ரத்னக் கலாப மயிலே.

2. சக்ரப் ரசண்டகிரி

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
   பட்டுக் ரவுஞ்ச சயிலந்

தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
   தனிவெற்பும் அம்புவியும் எண்

திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
   சித்ரப் பதம்பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
   திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
   பத்மப் பதங் கமழ்தரும்

பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
   பரம உபதேசம் அறிவிக்

கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
   கந்தச்சுவாமி தணிகைக்

கல்லார கிரியுருக வருகிரண மரகத
   கலாபத்தில் இலகு மயிலே.

3.ஆதார பாதாளம்

ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ
   தண்டமுக டதுபெயரவே

ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
   கவுட்கிரி சரம்பெயரவே

வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
   மிக்கப் ரியப்படவிடா

விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
   விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
   மகீதரி கிராத குலிமா

மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
   வள்ளிமணி நூபுர மலர்ப்

பாதார விந்தசே கரனேய மலரும்உற்
   பலகிரி அமர்ந்த பெருமாள்

படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
   பசுந்தோகை வாகை மயிலே.

4.யுககோடி முடிவின்

யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்
   உதித்ததென் றயன் அஞ்சவே

ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள
   லோகமும் பொற்குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
   விசும்பிற் பறக்க விரிநீர்

வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
   வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
   கேசரி முராரி திருமால்

நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
   நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
   முகிலுலவு நீலகிரிவாழ்

முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
   மூரிக் கலாப மயிலே.

5. சோதியிம வேதண்ட

சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி
   நயதுல்ய சோம வதன

துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
   சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்
   யாவுங் கொடுஞ்சி றகினால்

அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே
   அணைக்குங் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
   நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
   நிர்வியா குலன்சங் குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
   மாதவன் முராரி திருமால்

மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
   வரமுதவு வாகை மயிலே.

6.சங்கார காலமென

சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
   சகல லோகமு நடுங்கச்

சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
   சஞ்சலப் பட உமையுடன்

கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
   காரம் பிறந்திட நெடுங்

ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
   கற்றைக் கலாப மயிலாஞ்

சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
   சித்ரப் பயோ தரகிரித்

தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
   திருத்தணிமகீரதன் இருங்

கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
   க்ருபாகரன் கார்த்தி கேயன்

கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
   கிழிபட நடாவு மயிலே.

7. நீரப் பயோததி

தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்
   செகதலமு நின்று சுழலத்

திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
   தீக்கொப் புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
   பதைபதைத் தேநடுங்கப்

படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
   பச்சைப்ர வாள மயிலாம்

ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
   அமிர்தகல சக்கொங் கையாள்

ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
   மாநந்த வல்லி சிறுவன்

கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
   குருதரு திருத்தணி கைவேள்

கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
   குடிபுகுத நடவு மயிலே.

8.செக்கரள கேசசிக

செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
   சிந்தப் புராரி யமிர்தந்

திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
   தீவிஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
   சங்கார கோர நயனத்

தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
   சண்டப்பர சண்டமயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
   விருத்தன் திருத்த ணிகைவாழ்

வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
   வெளிப்பட வுணர்த்தி யருளித்

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
   சுவாமிவா கனமா னதோர்

துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
   துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

மேலும் படிக்க : முருகரின் கந்த குரு கவசம் பாடல்

9.சிகரதம னியமேரு

சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
   கிரியெனவும் ஆயிரமுகத்

தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
   திங்கள்சங் கெனவும்ப்ரபா

நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
   நின்றமா முகில் என்னவே

நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
   நீலக் கலாப மயிலாம்

அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
   அடியவர்கள் மிடிய கலவே

அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
   அலங்கற் குழாம் அசையவே

மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
   வல்லவுணர் மனம்அசைய மால்

வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
   வையாளி யேறு மயிலே.

10.நிராசத விராசத

நிராசத விராசத வரோதய பராபர
   னிராகுல னிராமய பிரா

னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
   நிலாவிய உலாசஇ தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
   குராநிழல் பராவு தணிகைக்

குலாசல சராசரம் எலாமினி துலாவிய
   குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
   புராதன முராரி மருகன்

புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
   லாகும் அயி லாயுதனெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
   சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
   ஷடாநநன் நடாவு மயிலே.

11. எந்நாளும் ஒருசுனையில்

எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ
   திலங்கிய திருத்த ணிகைவாழ்

எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
   நம்பிரா னான மயிலைப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
   பகர்ந்தஅதி மதுர சித்ரப்

பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
   படிப்பவர்கள் ஆதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
   வாணிதழு வப்பெ றுவரால்

மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
   வாரிச மடந்தை யுடன்வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்
   அமுதா சனம்பெ றுவர்மேல்

ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
   அழியா வரம்பெ றுவரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *