செய்திகள்

இந்த ஆண்டு அனுமதி கிடைக்குமா..? காத்து கிடக்கும் பக்தர்கள்

கச்சத்தீவு அந்தோனியர் தேவாலய திருவிழாவில் இந்த ஆண்டு தமிழக பக்தர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழக பக்தர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி.டி.ஆர்.பாலு, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் பிப்ரவரி 6ம் தேதி டெல்லி வரும் போது கச்சத்தீவு தேவாலயத்தில் தமிழ்நாடு பக்தர்களுக்கு அனுமதி தொடர்பாக பேசுவதாக வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *