கல்விசெய்திகள்தேசியம்வேலைவாய்ப்புகள்

பிரதமரால் தொடங்கப்பட்ட அரசின் வேலைவாய்ப்பு இணைய பக்கத்தில் ஜூலை 11 முதல் வேலைக்காக பதிவு

கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணையப் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

450 நிறுவனங்கள் 2.90 லட்சம் வேலைவாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் 1.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தளவாடங்கள், சுகாதாரம் வங்கி நிதி சேவைகள் மற்றும் காப்பீடு சில்லறை மற்றும் கட்டுமானம் ஆகியவையே சுமார் 73.5 சதவீத வேலைகளை வழங்கும் துறைகளாக இருக்கின்றன.

இணையப் பக்கத்தில் வெளியிடப் பட்ட மொத்த வேலை வாய்ப்புகளில் 77 சதவீதத்திற்கு அதிகமான ஹரியானா, தெலங்கானா, டெல்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் உள்ளனர். வேலை தேடும் நபர்களில் 42% பேர் உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் டெல்லி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையப் பக்கத்தில் பதிவு செய்தவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் இல்லை. சுய தொழில் செய்யும், கள தொழில் நுட்ப வல்லுநர்கள், தையல் இயந்திர ஆபரேட்டர்கள், ஃபிட்டர்கள், தையல் காரர்கள், எலெக்ட்ரிசியன்கள் ஆகியோர் வேலை தேடுவோர் பட்டியலில் முதலிடம் வகித்துள்ளனர்.

இதே நேரத்தில் கூரியர் டெலிவரி நிர்வாகிகள், கணக்கு நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், விற்பனை முகவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளன. அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தொகுத்த தரவுகளின் படி பதிவு செய்த 69 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் 1.50 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளன.

இவர்களில் 7 ஆயிரத்து 700 பேர் மட்டுமே பணியில் சேர்ந்து உள்ளார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 21 வரையிலான ஒரு வார காலத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர்.

ஜூலை 11ம் தேதி பிரதமர் தொடங்கப்பட்ட அரசின் வேலைவாய்ப்பு இணைய பக்கத்தில் 40 நாட்களில் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வேலைக்காக பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேலைக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 691 பேர் மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *