கல்விவேலைவாய்ப்புகள்

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் சார்பாக தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 211 ஆகும். சங்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரங்களாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர், தரவு உள்ளிட்டாளர் ஆகியோர் பணியிடங்கள் திறக்கப்பட உள்ளன. நாமக்கல் பகுதியில் இவர்களுக்கு பணியிடம் இருக்கும் செவிலியர் பணியிடத்திற்கு 208 பேர் நிரப்பப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கல்வி


விண்ணப்பதாரர்கள் பிஎஸ்சி , டிஜிஎன்எம் போன்ற பாடங்களில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்களுக்கு விண்ணப்பிக்க தரவு உள்ளீட்டாளர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார அலுவலர்கள் 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு சலுகை அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : SSC மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு

தேர்வு

நேர்காணல் மற்றும் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி கீழே கொடுத்துள்ளோம்.

முகவரி

செயலாளர் மாவட்ட நல வாழ்வு சங்கம்

துணை இயக்குனர்

சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்

சுகாதாரப்பணிகள் அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

நாமக்கல் மாவட்டம் 637 003

அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2023/01/2023011393.pdf கிளிக் செய்யவும்.

நாமக்கல் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 25 ஆகும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://namakkal.nic.in/ இங்கு கொடுத்துள்ளோம்.

மேலும் படிக்க : 8, 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *