ஆரோக்கியம்சமையல் குறிப்புமருத்துவம்வாழ்க்கை முறை

ஜோராக வைக்கும் இஞ்சிசாறு..!!

ஜோராக வைக்கும் இஞ்சிசாறு. சித்த மருத்துவத்தில் இஞ்சிக்கு அஞ்சி மருந்து எதுவுமில்லை, என்ற மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதால் உணவு மருந்தாகி விடும்.

சக்தி நிறைந்த இஞ்சியின் தோலை நீக்கி விட்டு தான் பயன்படுத்த வேண்டும். இஞ்சி, ஏலக்காய், திரிகடுகு, அதிமதுரம், சீரகம், சந்தனத்தூள் ஆகியவை சிறிதளவு எடுத்து சிதைத்து தண்ணீரில் போட்டு காய்ச்சி நீர் வற்றியதும் வடிகட்டி எடுத்து தினமும் ஐந்து வேளை உட்கொண்டு வந்தால் அதிகமான பித்தம் சரியாகி விடும்.

இஞ்சிக்கு அஞ்சிய மருந்தில்லை

இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிட்டு வர இருமல் குறையும். தலைவலி உள்ளவர்கள் இஞ்சியை தண்ணீர் விட்டு உரசி தலையில் பற்றுப் போட தலைவலி நீங்கும். மாதுளம் சாறு தேன் ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வந்தால் இருமல் சரியாகும். இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீருடன் விழுங்கினால் தொண்டைப்புண் குரல் கம்மல் நீங்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களும் கற்கண்டும் சேர்த்து குடித்து வந்தால் கட்டுப்படும். இஞ்சியை தோல் நீக்கி தேனில் ஊற வைத்து நாள் தோறும் உட்கொண்டு வந்தால், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும் சாறில் வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட்டால் பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், வயிறு இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று நீங்கும். இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

தினமும் 5 மிலி அளவு இஞ்சி சாறு தேன் கலந்து பருக வேண்டும் அல்லது இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். காலையில் இவ்வாறு சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணசக்தி இருக்கும் பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் குணமாக கசாயம் குடிக்க வேண்டும். தொண்டை வலிக்கு ஒரு மருந்து தான். பித்தம் அதிகமாகி தலைசுற்றல் விரக்தி ஏற்பட்டால், தேனில் கலந்து சாப்பிடலாம்.

இஞ்சி ஒரு சிறந்த நிவாரணி

கபம் வாத பிரச்சனையை போக்குகிறது. இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு என்பதால், குடலில் சேரும் கிருமிகளை அழிக்க வல்லது. கல்லீரலை சுத்தப்படுத்தும். மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இந்து உப்பு, கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

இதை ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கச் செய்கிறது. சித்த மருத்துவத்தில் எந்த மாதிரியான மருந்தாக இருந்தாலும், அதில் பெரும்பாலும் இஞ்சி இடம் பெற்றிருக்கும், இஞ்சி காய்ந்த பிறகு அதன் பயன்பாடு அதிகரிக்கிறது. இன்றைக்கு அஞ்சாத எதுவும் இல்லை என்பது உண்மைதானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *