விளையாட்டு

பெங்களூரு பரிதாபமாக பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது. கட்டு கட்டாக சரிந்த விக்கெட்.

ஐபிஎல் தொடரில் ஆறாவது போட்டி பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றன. முதல் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள்.

26(20) ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் போல்ட் ஆனார். இவரைத் தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரான் 17(18) ரன்களில் வெளியேறினார். கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிரடியாக விளையாடி கேஎல் ராகுல் சதம் அடித்தார். பஞ்சாப் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென்று உயர்ந்தன.

20 ஓவரில் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காது கேஎல் ராகுல் 132(69) ரன்களை விளாசினார். பெங்களூரு அணிகள் சிறப்பாக பந்துவீசிய துபே 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் 30, டிவில்லியர்ஸ் 28, பின்ச் 20 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

இறுதியில் பெங்களூர் அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட். பஞ்சாப் அணியில் விஷ்ணோவ், முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். காட்ரெல் 2 விக்கெட் சாய்த்தார். 207 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் சரிந்தன. கேப்டன் விராத் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். கடந்த போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய படிக்கல் இந்த போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *