Jallikattu bullsசெய்திகள்தேசியம்விளையாட்டு

பகலிரவு ஆட்டமாக பட்டையை கிளப்பும் இந்திய அணி!..

அகமதாபாத்தில் அபாரமாக இந்திய அணி தொடர் மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றது. நரேந்திரமோடி மைதானத்தில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 81 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா முதல் ஆட்டத்தை தொடங்கியிருக்கின்றது.

இஷாந்த் சர்மாவிற்கு இது நூறாவது போட்டியாகும் இஷாந்த் ஷர்மா எடுத்த விக்கெட் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

ஆட்டத்தின் 3-வது ஓவரில் சளியை வெளியேற்றி நம்பிக்கை கொடுத்தார். மேலும் இந்திய பந்து வீச்சாளர்கள் புதிய மைதானத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பப்படுகின்றது.

இங்கிலாந்து தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலில் இருக்கின்ற நிலையிலும் மறுபக்கம் இங்கிலாந்துக்கு சாதகமாக க்ராலி 54 ரன்கள் எடுத்து இருக்கின்றார். அவர் அக்சர் பட்டேல் பந்தில் அவுட்டானார்.

மேலும் முதல் செசனில் 27 ஓவர்கள் இந்திய அணி 81 ரன்கள் கொடுத்திருந்தது 4 விக்கெட் எடுத்து இருக்கின்றது. இங்கிலாந்து அணியை வெல்ல, இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்திய வெற்றி உறுதியாகும் என்று முதல் செசனில் தெரியவந்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *