விளையாட்டு

இந்தியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக தீவிர ஆலோசனை

கோவிட்-19 பாதுகாப்புடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் விளையாட்டுகளில் இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பதக்கங்களின் அளவு குறித்து அமைச்சகம் மற்றும் எஸ்ஏஐ அதிகாரிகளுடன் குழு விவாதித்ததாக விளையாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள துறைகள் முக்கியமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இந்தப் ஒலிம்பிக் போட்டியில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பதக்கங்களை எதிர்பார்க்கப்படுகிறது.
  • விளையாட்டுகளில் இந்திய அணியின் எதிர்பார்க்கப்படும் பதக்கங்களின் அளவு

டோக்கியோ விளையாட்டுகளுக்கான நாட்டின் தயார் நிலை நடந்து கொண்டிருக்கும் தேசிய முகாம்கள் விளையாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகின்றன. முன்னணி ஒலிம்பிக் போட்டி பிரிவுகளில் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுடன் கலந்து ஆலோசனை நடத்தின.

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவின் தயார் நிலையை ஆய்வு செய்தன. ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் பற்றி மதிப்பீடு செய்ய வரும் மாதங்களில் பல கூட்டங்களை நடத்த இந்த குழு திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்து 30 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இனிமேல் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இந்தியாவின் தயாரிப்புகளை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற நிலைக்குழு கலந்து ஆலோசனை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *