விளையாட்டு

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இடையே இந்தியாவின் முடிவு என்ன

இந்திய அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முயற்சித்தது. எல்லை பிரச்சினை ஒரு முடிவிற்கு வரும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளன என்ற தகவல் வெளியானது.

இது தொடர்பாக விளையாட்டு தொகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள இம்ரான்கான் தற்போதுள்ள அரசாங்கத்துடன் இரு அணிகளும் கிரிக்கெட் விளையாடினால் மைதானத்தில் பயங்கரமான சூழ்நிலை உருவாகும் என நான் நினைக்கிறேன் என்கிறார்.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் நடைபெற முடியாத சூழல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன.

இந்த சூழலில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை இரு நாடுகளின் கொரோனா மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்திருந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட கிரிக்கெட் தொடர்கள் ஏன் நடைபெறுவதில்லை என இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *