டிஎன்பிஎஸ்சி

சுதந்திரத்திற்குப் பின் இந்தியா குறித்த பார்வை!

டிஎன்பிஎஸ்சி குரூப் முக்கிய தேர்வு மற்றும் மற்ற போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற படித்து கொண்டிருக்கும் தேர்வுகளுக்காக இந்த பதிவை வழங்குகின்றோம். இவற்றைத் தொடர்ந்து படியுங்கள். உங்களது கனவு தேர்வை வென்று காட்டுங்கள்.

1947 சுதந்திரத்திற்கு பின் இந்தியா ஒரு பார்வை:

இந்தியா சுதந்திரமடைந்த காலம் முதல் இன்றுவரை பல்வேறு காலகட்டங்களை, சவால்கள், பொருளாதாரச் சூழல்கள் இவை அனைத்தும் கடந்து வந்துள்ளது.

இந்தியாவின் சுதந்திர காலம் சுதந்திரத்திற்கு பின் இந்தியா குறித்து நாம் அறிந்து கொள்ளும் முன்பு 1647 முதல் 1947 வரை சுதந்திரம் பெறும் வரை இந்தியா கடந்து வந்த பாதையை ஒரு முறை திருப்பிப் பார்த்துக் கொள்வோம். இது நிகழ்கால இந்தியாவை அறிந்துகொள்ள ஒரு உந்துசக்தியாக இருக்கும்.

1647 இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் 23 இடங்களில் வர்த்தக கிடங்குகளை நிறுவி அவற்றை நிர்வாகம் செய்து வந்தது.

1757 பிளாசிப் போரில் வெற்றி கல்கத்தா முழுமையாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாதிக்கத்தின் கீழ் வந்தது.
1857ல் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியாவில் சிப்பாய்களால் ஒரு பெரும் கழகம் ஏற்படுத்தப்பட்டது.  ஆங்கிலேயர்களைக் கலக்கமடையச் செய்தது. சிப்பாய் கழகத்திற்குப் பின் இங்கிலாந்தின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது இந்தியா. 1947 பிரிட்டனின் பிடியிலிருந்து இந்தியாவின் சுதந்திரம் உறுதியானது. சுமார் 300 ஆண்டு காலம் ஆங்கிலேயரின் பிடியிலிருந்தது இந்தியா.

விடுதலைப் போரின்போது இந்தியா எண்ணற்ற தியாகங்களையும், போராட்டங்களையும் சந்தித்து, 1947 இல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் சந்திர அறிவிப்பைப் பெற்றது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும் தேச விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் நாட்டைப் புதிய தொலைநோக்குடன் எடுத்துச்செல்ல முனைப்பு காட்டினர்.

சுதந்திர அறிவிப்பு:

1946 ஆகஸ்ட் 16ம் தேதி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு வேவல் பிரபு ஜவகர்லால் நேருவை கேட்டுக்கொண்டார். ஆனால் ஜின்னா சேர மறுத்தார். ஜின்னா நேரடி நடவடிக்கை நாள் பின்ப்பற்றி  இணைய மறுத்தார்.

கல்கத்தாவில் கலவரம் ஏற்பட்டது. திட்டமிட்ட தாக்குதலால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது. வைசிராய் வேவல் செயல் இழந்தார். நேரத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கிளமன்ட் அட்லி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பினை 1947 பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி வெளியிட்டார்.
1948 முதல் தேதி பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு அதிகார மாற்றம் செய்துவிடும். இந்தியாவின் யாரிடம் அதிகாரப் பொறுப்பு ஒப்படைப்பது என்பதை பிரிட்டிஷ் அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.

பிரபுவுக்கு பிறகு மவுண்ட்பேட்டன் பிரபு நியமிக்கப்பட்டார். மவுண்ட்பேட்டன் நீக்கப்பட்ட பின்பு நேரு, ஜின்னா வல்லபாய் பட்டேல் ஆசாத் காந்தி ஆகிய தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

மவுண்ட்பேட்டன் அட்லியின் அறிவிப்பையொட்டி தயாரித்தார். அத்திட்டத்தை தயாரிக்க நேருவும் சீர்திருத்த கமிஷனராக இருந்த விபி மேனனும் உறுதுணையாக இருந்தனர். பிரிட்டிஷ் அரசின் ஒப்புதலுடன் தன் திட்டம் அறியப்படுகிறது இதுவே இந்திய பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்தது.

1947 ஜூன் 3ஆம் தேதி பிரிவினையைப் பற்றி மவுண்ட்பேட்டன் நேருவும்  டெல்லி வானொலிமூலம் அறிவித்தனர்.

இதன் காரணமாகச் சட்ட வடிவம் படியாக எழுதப்பட்டது காங்கிரஸ் அங்கீகாரம் கொடுத்தது. ஜின்னாவின் பிடிவாதத்தாலும் வன்முறை போக்கும் நாட்டைப் பாதிக்கும் என்பதால் இந்திய தலைவர்கள் பஞ்சாப் மற்றும் வங்காளத்தையும் கூறுபோட்டு தனிநாடாக கொடுக்கச் சம்மதித்தனர்.

சுதந்திர இந்தியா 1947 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவில் பிறந்தது. 

டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்தில் மைய மண்டபத்தில் இந்திய அரசமைப்பு சட்டமன்றம் கூடியது.
இந்திய அரசியலமைப்பு சட்ட மன்றத்திற்கு ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார் சரியாக இரவு 12 மணிக்குச் சுதேச கிருபாளனி வந்தேமாதரம் என்றப் பாடலை பாட, ராஜேந்திர பிரசாத்தின் தலைமை உரைக்குப்பின்  நேரு இந்திய சுதந்திரம் பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்திய சுதந்திரத்தை  உரையில் நேருவின்  அறிவிக்கையில்  ‘நீண்ட நெடுங்காலத்திற்கு பின்,  நாம் நம்மை ஆட்சி செய்யத் தொடங்கி விட்டோம் நள்ளிரவு நேரம் உலகமே உறங்கிக் கொண்டிருக்கின்றது சுதந்திரமாக வாழ இந்தியா விழித்துக் கொண்டுள்ளது’,  என்று தெரிவித்தார்.

நேருவின் முன்மொழிவுக்கு பின் சவுத்ரி காலிகுவாஸ்மன் அதனை வழிமொழிந்தார்.

உறுப்பினர்களின் சுதந்திரதின சூல் உரைக்குப் பின் பெண்களின் சார்பாக ஹன்சா மேத்தா மூவர்ணக் கொடியைக் கொடுக்க இந்தியாவின் கடைசி வைசிராய் மற்றும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுண்ட்பேட்டன் பிரபு யூனியன் ஜாக் கொடியைச்  இறக்கி சுதந்திர இந்திய கொடியை ஏற்றினார்.

இந்தியப் பிரிவினை: 

இந்தியா இரு நாடுகளாகப் பிரிந்து,  பாகிஸ்தானுக்கு சேர வேண்டியப் பகுதி பிரித்துக் கொடுக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே எல்லை கமிஷன் அமைக்கப்பட்டு கமிஷனின் தலைவராக சர் சிரில் ராட்க்ளிஃப் நியமிக்கப்பட்டார்.

இந்தியா பாகிஸ்தான் பற்றி அறியாத பாரிஸ்டர் ராட்க்ளிஃப் பாரபட்சமின்றி செயல்படுவார் என 1947 ஜூன் 24ஆம் தேதி எல்லை கமிஷனில் நியமிக்கப்பட்டார்.

ராட்க்ளிஃப் இந்தியா வந்தவுடன் பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை பற்றி போன் பேட்டரியுடன் கலந்தாலோசித்தார். இரு நாடுகளின் பகுதிகளையும் அவரவருக்கு ஏற்ப பிரித்துக் கணக்கெடுத்து அறிக்கை தயாரித்தார்.

இந்திய இராணுவத் தலைவராக இருந்த சர்சிரில் கிளாட் எல்லைக்கோடுகளைப் பிரித்த பின்பு பாதுகாப்புக்கு ஆயத்தமானார்.

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி   நிலப்படங்கள், மக்கள்தொகை, அட்டவணைகள், ஆவணங்கள், புள்ளி விவரங்கள், அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குச் சேர வேண்டிய பகுதிகளை பிரித்துக் கொடுத்தனர். அதன்படி பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வங்காளமும் தனியாகப் பிரித்து கொடுக்கப்பட்டது. பிரிவினைக்குப் முன்பே பஞ்சாப்பில் இனக்கலவரம் வெடித்தது.

மேஜர் ஜெனரல் ரீஸ் தலைமையில் பஞ்சாப் எல்லைப்படையை உருவாக்கப் பட்டது ஆனால் பஞ்சாப் படைக்கு போதிய பலம் இல்லை.

தொடர்ந்து கலவரங்கள் பெரிய அளவில் நடைபெற்றது 1946 ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் மகாத்மா காந்தி சமாதனம்  பேசவேண்டி 40 கிலோமீட்டர் நடந்தே சென்றார். அவருடைய சமாதான முனைப்பு நவகாளி பகுதி வரை தொடர்ந்தது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மக்கள்  மாறிப் பிரிந்து சென்றனர். அடுத்த தொடர்ந்து இந்தியாவின் பொருளாதார நிலையை பற்றி தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *