ஆரோக்கியம்வாழ்க்கை முறை

உடல் ஆரோக்கியம் பேணுவோம் கொரோனாவை மீள்வோம்

சாமானிய மக்கள் அனைவரும் சற்று பயந்து போய் உள்ளனர். பெரிய நடிகர்களான அமிதாப் மற்றும் அபிஷேக் இருவருக்கும் கொரோனா உறுதி என்பதால் நமது நிலையெல்லாம் என்ன ஆகும் என்று படபடப்பும் பயமும் மக்களிடையே அதிகரித்து காணப்படுகின்றது.

இதனால் இதனை வைத்து எல்ஐசி பாலிசி எடுக்கும் பணிகளும் ஆங்காங்கே பரவியுள்ளது என்பது தகவல்கள் கிடைக்கின்றன. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியில் சென்று வந்ததும் வீட்டில் பக்கெட்டில் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரினை கை கால் முகம் கழுவி கொள்ளவும்.

நெல்லிக்காயை தினமும் சாப்பிட வேண்டும். அத்துடன் எலுமிச்சைச் சாறு இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது குடித்துவர வேண்டும்.

மிளகு ரசத்தை மக்கள் செய்து சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் பெருகும். இந்த நேரத்தில் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக பேக்கிங் பண்டங்களை தவிர்ப்பது முக்கியமானதாகும். வெளியில் இருக்கும் பணியாட்கள் மேகி போன்ற இன்ஸ்டன்ட் பொருட்களை தவிர்ப்பது என்பது நல்லதாகும். அது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல.

பார்த்து பத்திரமாக இருக்கவும் மக்களே. உடல் ஆரோக்கியம் என்பது எல்லாவற்றையும் விட மிகவும் அவசியமாகும். தைரியமாக இருக்க வேண்டும். இதைத் தொட்டால் நோய் வந்து விடும்.

அதை தொட்டால் தொற்று உறுதியாகும் என்ற பயமும் அச்ச உணர்வு ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். எல்லாம் நலமாக அமையும் நம்பிக்கையுடன் இருப்போம். உடற்பயிற்சியுடன் ஆரோக்கியம் காப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *