செய்திகள்தமிழகம்

Ilaiyaraja daughter death : இசைஞானியின் இதயம் பவதாரணி திடீர் மரணம்

இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக சற்று முன்பு உயிர் இழந்தார்

இசைஞானியின் மகள் பவதாரணி தனது தந்தை மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து பல்வேறு பாடல்களை பாடியுள்ளார் மேலும் பல படங்களில் பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். நாற்பத்தி ஏழு வயதான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார் இந்நிலையில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இந்த மண்ணுலகை விட்டு இன்னுயிர் நீத்தார்.

பாடகி பவதாரணி 2000 ஆம் ஆண்டு வெளியான பாரதி திரைப்படத்தில் மயில் போல என்னும் பாடலை பாடி அந்த பாடலுக்காக தேசிய விருதை பெற்றுள்ளார். மேலும் தமிழ் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளில் தனது தேன் போன்ற குரலில் பாடல்களை பாடி தேன்குயில் பாடலுக்கு சொந்தக்காரியாக நம் மனதில் நின்றவர் பவதாரணி.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *