கல்விசெய்திகள்தமிழகம்

பள்ளிகள் திறந்தாலும் ஆய்வு தகவலின்படி 62% பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்ப தயாராகவில்லை

பெரும்பாலான பெற்றோர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பள்ளி திறப்பது பற்றி அரசு முடிவெடுக்கக் கூடாது என்று விரும்புகின்றனர். பதிலாக ஆன்லைன் கல்வி, தொலைக்காட்சி, வானொலி உள்பட வேறு வழிகளில் கல்வி கற்பிக்க அரசு முயற்சி செய்யலாம் என்றும் ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர்.

லோக்கல் சர்க்கிள் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப் பட்டாலும் அடுத்த 60 நாட்களில் ஆறு சதவீத மக்கள் மல்டிபிளக்ஸ் மற்றும் தியேட்டர்களுக்கு செல்வோம் என்று தெரிவித்துள்ளார்கள்.

அடுத்த 60 நாட்களில் மெட்ரோ மற்றும் உள்ளூர் ரயில்களில் பயணம் செய்வோம் என்று 36 சதவீத மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

62 சதவீத பெற்றோர்கள் செப்டம்பர் 1-ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

23 சதவீத பெற்றோர்கள் அனுப்புவோம் என்றும் 15% முடிவெடுக்கவில்லை என்றும் கருத்துக் கூறுகின்றனர். இந்தியாவில் கொரோனா காரணமாக கடைபிடிக்கப்படும் தொடர் ஊரடங்கு களால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

செப்டம்பர் 1-ஆம் தேதியன்று பள்ளிகளை திறக்க மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் பெற்றோர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அப்போது இந்த கருத்து கணிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம். 62% பெற்றோர்கள் தயாராகவில்லை என்று ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *