வாழ்க்கை முறை

விருப்பங்களை நிறைவேற்றும் ஈர்ப்பு சக்தி கொண்ட மனித எண்ணங்கள் !

மனதை தெளிவாக வைத்து கொண்டு நினைப்பத்தை நடத்திக் காட்ட முடியுமா எனில் நிச்சயம் எல்லோராலும் முடியும். பிரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தி மனிதர்களின் எண்ணங்களை  நிகழ்வுகளாக்கி  வாழ்வினை விருப்பங்களுக்கேற்ப மாற்றிக் கொடுக்கின்றது. சக்திவாய்ந்த விருப்பங்கள் நிச்சயம் நிகழ்வுகளாக மாறும்

எதுவாக நினைக்கின்றாயோ அதுவாகவேயாகின்றாய்!

வாழ்வின் மனித எண்ணங்கள் விருப்பங்கள் நிகழ்வுகளாக மாறக்கூடியவை அவை  நிஜவாழ்வில் சாத்தியமானவை எண்ணங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்பது பலருக்கு தெரிவத்திலை. நாம் எதை நினைக்கின்றோமோ அதனை நம்மை நோக்கி இழுக்கின்றோம்.

எடுத்துக்காட்டாக சாவித்ரி தனது கணவன் சத்தியாவானை எமனிடம் இருந்து காப்பற்றி தீருவதாக உறுதி எடுத்தால் கணவனுடன் தொடர்ந்து  சென்றால் எமனையும் வென்றால்  என்ற கதை படித்திருப்போம். அது எப்படி சாத்தியம் என  சாவித்ரி  நினைக்கவில்லை எதுவானாலும் கணவனின் உயிரை மீட்க வேண்டும் என்று மட்டும் உறுதியுடன் இருந்தால் அதன்படி எமனையும் வென்றால். இவ்வாறுதான் மனித எண்ணங்கள் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது.

எண்ணங்கள் நிகழ்வுகளாக மாற்றம் பெறுதல்: 

ஒரு கார் வாங்குவது போன்றோ அல்லது வீடு வாங்குவது மற்றும் கோடீஸ்வரர் ஆவது போன்ற கனவுகள் கொண்டுள்ளீர்களா நிச்சயம்  அவை  நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அது குறித்த பாஸீட்டாவாக சிந்திக்க வேண்டும். மகிழ்ச்சிகரமான  சிந்தனை இருக்கும் பொழுது நினைத்தவற்றை நினைத்தாவாறே பெறலாம்.

விருப்பங்கள் நிறைவேற்றம்: 

விருப்பங்கள் நிறைவேற்றம் அடைய அது குறித்த தெளிவான பார்வை இருக்க வேண்டும். மனதில்  விருமபிய பொருட்கள் பெறுவது பற்றிய பாஸிட்வான எண்ணங்கள்  கொண்டிருக்க வேண்டும். தீவிரமான நேர்மறை சிந்தனை விரும்பிய பொருளை பெற வழிகாட்டும். மேலும் விரும்பிய பொருளை பெற நினைக்கும் பொழுது அது முடியுமா அதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதை விட விரும்பிய பொருளை பெற்று விட்டதாக நினையுங்கள் அது உங்கள் விருப்ப  பொருளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். 

நினைத்த காரியங்கள் நிறைவேற காலதாமதம் ஏற்படும்  பொழுது  காத்திருந்த விரும்பிய பொருள் கிடைக்கும் என்ற எண்ணத்தை உறுதியாக பின்பற்ற வேண்டும். வேண்டிய பொருள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றதாக  நம்ப வேண்டும். நாம் விரும்பியதை கிடைக்க காலதாமதம் ஏற்படும்  பொழுது நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். 

தொடர்ந்து 90 நாட்கள்: 

தொடர்ந்து 90 நாட்கள் விரும்பிய மதிபெண், கார், ப்ரொமோசன், வீடு வாங்குவது,  ரூபாய் 10 ஆயிரம் பணம் கிடைத்ததுப்  போன்ற  ஏதேனும் ஒன்று கிடைத்துவிட்டதாகவும் அதனை கொண்டு மேற்கொண்டு செய்ய போகும் நிழ்வுகளை மனதில் காட்சிப் படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு பொருளை பெற்றதாக காட்சிப் படுத்தும் பொழுது நிச்சயம் அந்த பொருள் அல்லது மனிதன், பதவி, பணம் எதுவானாலும் நிச்சயம் கிடைக்கும். 

செல்வம் வெற்றி! 

நீங்கள் விரும்பிய செல்வத்தை புகழை ஈர்க்க வேண்டுமா  அதனை அடைந்துவிட்டதாக செல்வம் கிடைத்தப்பின் வாங்கவுள்ள பொருட்களைப் பட்டியலிட்டு காட்சிப் படுத்தி மகிழ்ச்சி அடையவும்  நிச்சயமாக செல்வத்தை ஈர்க்கலாம். செல்வத்தை பெற எளிதில் முடியும் என்று மட்டும் நினையுங்கள் எப்படி பெறுவது எதன் மூலம் பெறுவது என்ற சிந்தனையை விட்டு  ஆழ்மனதில் நம்பவும் அது நிச்சயம் உங்களுக்கான வழியை காட்டும். இந்த பிரபஞ்சம் அவ்வளவு ஆற்றலை  எண்ணங்களை நிறைவேற்ற தரும். இந்த உலகில் வெற்றி பெற அனைவரது வாழ்விலுன் இந்த எண்ணங்களின் ஈர்ப்பு சக்திதான் வெற்றி பெற்றுள்ளது.

நிம்மதியான மனநிலையை பாஸிட்டாவா எவ்வளவு தூரம் வைத்துக் கொள்கிறோமோ அவ்வளவு  தூரம் நாம் விரும்பியவற்றை  பெறலாம். மனதில் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான சூழல் அன்பான குடும்பங்கள் அவை அனைத்தையும் மனிதர்களான நம்மால் நமது விருப்படி  பெறமுடியும். நமது விருப்பங்களுக்கு கேற்ப பிரபஞ்சத்தினை செயல் படவைக்க முடியும். 

மேலும் படிக்க: 

வாழ்க்கையில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டிய  ரகசியங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *