அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

பளிச்சென்று சருமம் அழகாகவும் பொலிவோடும் இருப்பதற்கு

சருமம் அழகாகவும் பொலிவோடும் இருப்பதற்கு வாரம் ஒரு முறை ஆவி பிடிக்கலாம். ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும்.

நேரம் கிடைக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து சோர்ந்து போன உங்கள் முகத்தை புத்துணர்ச்சியுடன் அழகாக மாற்றுங்கள். முகத்திலுள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான் முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது.

ஆவி பிடிப்பதால் அந்த அழுக்குகளை நீக்கி பளிச்சென்று இளமைத் தோற்றத்தை தருகின்றது. முகத்தில் உள்ள பருக்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும். சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால் சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால் அழுக்கு துளைகளில் சேரும்.

அழுக்குகள் ஆவி பிடித்து துணியால் துடைக்கும் போது போய்விடும். முகத்தில் பரு இருக்கும் போது மூன்று நிமிடங்கள் ஆவி பிடித்து அரை நிமிடங்கள் ரிலாக்சாக இருந்து பிறகு ஐஸ் கட்டியால் முகத்தை தேய்த்தால் பிம்பிள் உடைந்து விடும்.

இதை செய்வதால் ஒரே நாளில் பிம்பிள் குறையத் தொடங்கும். வெந்நீரில் ஆவி பிடிப்பதால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். குறைந்தது 5 நிமிடமாவது ஆவி பிடிக்க வேண்டும்.

பிறகு முகத்தை தேய்ப்பதால் மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்து விடும். கரும்புள்ளிகள் வேரோடு வந்து விடும். முகத்தில் உள்ள அழுக்குகளை எளிதாக நீக்குவதற்கு இந்த முறை மிகவும் சிறந்ததாக இருக்கும்.

எப்போது ஆவி பிடிக்கின்றோமோ அப்போது ஆவி பிடித்து முடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *