ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

சிவனின் சக்தி வாய்ந்த நாளான பிரதோஷம் எத்தனை முறை பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்???

இவ்வுலகை காக்கும் சிவபெருமானுக்கு உகந்த நாளான பிரதோஷத்தன்று அவரை மனதார நினைத்து நடைபெற்றால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மகா சக்தி வாய்ந்த பிரதோஷம் மாதத்தில் ஒரு முறை வருகிறது. வருடத்திற்கு ஒரு முறை மகா பிரதோஷம் என்னும் சிவராத்திரி விசேஷமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டு இரவு முழுவதும் சிவபெருமானுக்காக பிராத்தனை செய்வர். இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த பிரதோஷத்தில் இன்னும் மேலும் பல சிறப்புகள் உள்ளன. அதைப்பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரதோஷத்தின் பலன்கள்

  • 3 முறை பிரதோஷத்தை தொடர்ந்து பார்த்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் பார்த்ததற்கு சமம்.
  • 5 முறை பிரதோஷத்தை தொடர்ந்து பார்த்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.
  • 7 முறை பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
  • 11 முறை பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலும் மனமும் வலிமை பெற்று உடலுக்கு சக்தி கிடைக்கும் மனதிற்கு புத்துணர்வு ஏற்படும்.
  • 13 முறை பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நீண்ட நாள் நிறைவேறாத காரியங்கள் நிறைவேறும் நீங்கள் நினைத்த காரியம் தங்கு தடை இன்றி நடைபெறும்.
  • 21 முறை பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
  • 33 முறை பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

  • 77 முறை பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு யுத்ரயாகம் செய்வதற்கு சமமாகும். யாகம் செய்தால் கிடைக்கும் பலன் என்னவோ அந்த பலன் முழுமையாக கிடைக்கும்.
  • 108 முறை பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு தேவேந்திர பூஜை செய்ததற்கு சமமாகும்.
  • 121 முறை பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜென்மம் என்பது கிடையாது. இப்பிறவியே கடைசி ஜென்மம் ஆகும் சிவனின் திருவடியை அடைந்து விடுவீர்கள்.
  • 1008 இறை பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு அஸ்வமேதயாகம் நடத்தியதற்கு சமமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *