சமையல் குறிப்புவாழ்க்கை முறை

உடலுக்கு புது தெம்பு கிடைக்க பானகம்

பானகம் இனிப்பு, புளிப்பு, உப்பு கலந்த நீர் ஆகாரம். கோடை வெயில் காலத்தில் குடிக்க களைப்பு நீங்கி உடலுக்கு புது தெம்பு கிடைக்கும். இதை அப்படியே பருக சளி தொந்தரவு நீங்கும். தொண்டைப் பிடிப்பு சரியாகும். உடல் உஷ்ணம், களைப்பு நீங்கும். கோடை வெயிலில் வீட்டில் வரும் விருந்தினருக்கு ஏற்ற நீர் ஆகாரமாக இருக்கும்.

பானகம்

தேவையான பொருட்கள்

அரை லிட்டர் தண்ணீர், புளி தேவையான அளவு, ஏலக்காய் பொடித்தது கால் தேக்கரண்டி, வெல்லம் 2 தேக்கரண்டி, சுக்குத்தூள் அரை தேக்கரண்டி, மிளகுத்தூள் கால் தேக்கரண்டி.

செய்முறை விளக்கம்

புளியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து வைக்கவும். வெல்லம், தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். இறுதியில் சுக்குத்தூள், ஏலக்காய் பொடி, மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இதை அப்படியே பருக ஏற்ற நீர் ஆகாரமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *