ஆன்மிகம்ஆலோசனை

இதுதான் உண்மையான ஆன்மீகம்

கடவுள் அனைத்திலும் இல்லை அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்பது பழமொழி. அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து அதற்கான பலனை எதிர்பார்க்காமல் வாழ்ந்து வந்தால் மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

இறைவனுக்கு ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து சதாசர்வகாலமும் அவரை நினைத்து எந்த செயல் செய்தாலும் இது அவரால் செய்யப்படுகிறது. என்ற நினைப்புடன் செய்து இந்த செயலின் பலனை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம் ஆக கருதப்படுகிறது.

இறைவனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். உண்மையான பக்தி மட்டுமே. நமக்கு ஏற்படும் நன்மைகள், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல்.

நமது வலது கையில் செயல் திறமை உள்ளது. அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும் இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை என்று கூறப்படுகிறது.

பல மணி நேரம் வேறு பல சிந்தனைகளுடன் பூஜை செய்யாமல் இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி எனக்கு உன்னைத் தவிர யாருமில்லை, அனைத்தும் நீயாக இருக்கிறாய்.

இந்த உடலை நீயே வழிநடத்தி செல் என சரணடைந்து விடு. கடமைகளை மிகச்சரியாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது மற்றுமொரு ஆன்மீக வாழ்க்கை.

ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும் பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *