ஜில்லென்ற மலைக்காற்று பெற! குடும்பத்தோடு கண்டு மகிழ! தமிழகத்தின் சுற்றுலா தலங்கள்
தமிழகத்தில் வால்பாறையில் இயற்கை அழகு பல வடிவங்களில் தன்னை அலங்கரித்து நிற்கிறது. சுற்றிலும் தேயிலை, தடுப்பணைகள், நீரோடைகள், அருவிகள், சோலைகள், வானுயர மரங்கள், காப்பி தோட்டங்கள் என்று காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை தொடரின் மேற்குச் சரிவில் தமிழக பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் இருக்கிறது வால்பாறை.
மேகமலை சுற்றுலா
மேகமலை கோடை காலத்தில் அழகிய நீல வானத்தை பார்க்கலாம். அதிக ஆரவாரமில்லாத அமைதியான ஊர் இது. ஏரி, நீர்நிலைகள் சூழ்ந்த அழகிய தேயிலைத் தோட்டங்கள் கொண்ட சுற்றுலா மையம். ஆங்கிலேயர் காலத்தில் கண்டறியப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டு தோட்டங்கள் நிறைந்த மலைப்பகுதி மேகமலை. 5000 அடி உயரத்தில் மேகக் கூட்டம் இந்த மலைக்குன்றுகள் மீது தவழ்ந்து செல்வதால் மேகமலை என்று அழைக்கப்படுகிறது.

கோத்தகிரி சுற்றுலா
கோத்தகிரி கோடைகால ஓய்வை முடித்து கொண்டு மணம் கமழும் டீ தூள் மற்றும் யூகாலிப்டஸ் தைலம் இங்கு வாங்கி வரலாம். தமிழக முதல்வர் ஓய்வு எடுக்கச் செல்லும் நாடு இதன் அருகே தான் உள்ளன. கோவையிலிருந்து 66 கிலோ மீட்டர் மேட்டுப்பாளையத்தில் இருந்து 33 கிலோமீட்டர் பயணம் செல்ல வேண்டும். மணம் வீசும் யூகலிப்டஸ் மரங்கள் கூடுதல் அழகு. நீலகிரி மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 5800 அடி உயரத்தில் உள்ள மற்றொரு தேயிலைத் தோட்ட மலை நகர்.
கொல்லிமலை சுற்றுலா
கொல்லிமலை மரங்கள் சூழ்ந்த மலை சாலையில் மரங்களின் இலைகளுக்கு இடையே 72 கொண்டை ஊசி வளைவுகளில் பயணிப்பதே தனி சுகம். சேலம், திருச்சி நகரங்களிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அழகிய மலை கொல்லிமலை. 1300 படிக்கட்டுகள் கீழ்நோக்கி அரை மணி நேரம் மலை இறங்கினால் அழகிய ஆகாயகங்கை அருவி உள்ளது.
குளித்து மகிழ்ந்து மீண்டும் மலை ஏற ஒரு மணி நேரம் ஆகும். இந்த ஒரு பயணமே திரில்லான அனுபவத்துக்கு உத்தரவாதம். தரமான அரசு குடில்கள் தங்குவதற்கு உள்ளன. கொய்யா பழங்கள், ருசியான பழம் போன்ற பழங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. மாசிலா அருவி என்ற மற்றொரு சிறிய அருவியும் இருப்பதால் இங்கும் குளித்துவிட்டு செல்கின்றனர்.
சிறுமலை சுற்றுலா
சிறுமலை வாழை, நெல்லி போன்ற கனிகள் நிறைந்த இந்த மலைப்பகுதி. கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் இருப்பதால் கோடையிலும் காலை, மாலை நேரங்களில் இதமான காலநிலைக்கு உத்தரவாதம் உறுதி. திண்டுக்கல் நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த சிறுமலை 19 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது சிறுமலை.

ஏலகிரி சுற்றுலா
ஏலகிரி கண்ணுக்கு விருந்தாக ஜலகம்பாறை அருவி. சாகச விளையாட்டுகளுக்கு பாராகிளைடிங், மலையேற்ற வசதிகளும் இருக்கின்றன. தரமான தங்கும் விடுதிகளும் உள்ளது. பரந்து விரிந்த புங்கனூர் ஏரியில் படகு சவாரி செய்யலாம். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி – ஜோலார்பேட்டை ஊர்களுக்கு அருகே கடல் மட்டத்திலிருந்து 4600 அடி உயரத்தில் உள்ளது ஏலகிரி.
ஏற்காடு சுற்றுலா
ஏற்காடு ஏரி ரோஜா தோட்டம் சில்க், பண்ணை, பக்கோடா பாயிண்ட், ஹெவன் தொங்கு பாறை, கிரேஞ்ச் கரடி குகை, மலைக்கோவில், சேர்வராயன், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட் போன்ற பார்க்க வேண்டிய இடங்கள் இங்கு உள்ளன. தென்னிந்தியாவின் ஆபரணம் என்றும் ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படும் ஏற்காடு. கடல் மட்டத்தில் இருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன. பசுமையான பள்ளத்தாக்குகள், மூடுபனி வானிலை என இங்கு நிலவும் குளிர் சூழல் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும்.

கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள்
கொடைக்கானலில் காண வேண்டிய சுற்றுலா இடங்கள். செண்பகனூர், அருங்காட்சியகம், வெள்ளி நீர்வீழ்ச்சி, பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு கண்ணோட்டம், குணா குகை, தூண் பாறைகள், குறிஞ்சி ஆண்டவர் கோயில், செட்டியார் பூங்கா, பிரயன் பூங்கா, கோக்கர்ஸ் வாக் ஏரி போன்ற இடங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாக அமைகிறது.
நடுத்தர பட்ஜெட்டில் உயர் மதிப்பிலான சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக விளங்குகிறது. அற்புத காலநிலை மற்றும் இயற்கை அழகு மிகுந்து காணப்படும். இந்த இடம் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும். கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஊட்டி சுற்றுலா இடங்கள்
ஊட்டி சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் தாவரவியல் பூங்கா, செயின்ட் ஸ்டீபன் சர்ச் அரசு அருங்காட்சியகம். பனிச்சரிவு ஏரி, காமராஜ் சாகர் ஏரி, மேல் பவானி ஏரி, எமரால்டு ஏரி, ஊசிமலை கண்ணோட்டம், முக்கூர்த்தி தேசிய பூங்கா, முதுமலை தேசிய பூங்கா, பைக்காரா ஏரி, பைக்காரா நீர்வீழ்ச்சி, தேயிலை தோட்டங்கள், பைன் காடுகள், தொட்டபெட்டா சிகரம், ரோஜா தோட்டம் போன்ற இடங்களுக்கு செல்ல பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் இடமாக அமைகிறது.

தமிழ்நாட்டில் விடுமுறைக்கு சுற்றுலா
தமிழ்நாட்டில் உள்ள மலை வாழிடங்களின் மகுடமாக ஊட்டி பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. நீலகிரி மலையில் 2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊட்டியில் காணப்படும் உயரமான மலைகள், அடர்ந்த காடுகள், பரந்த புல்வெளிகள், அழகான பள்ளத்தாக்குகள் காரணமாக இது மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. ஊட்டி மலைத்தேன் ஊட்டி வரிக்கி, ஊட்டி டீ தூள் வாங்கி வரலாம்.
விடுமுறைக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலைவாழிடங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். நகரத்தின் மக்கள் நெருக்கடி வெப்பம் புகை ஆகியவற்றில் இருந்து விலகி உடல் மற்றும் உள்ள புத்துணர்ச்சி மலைவாழ் இடங்களுக்கு சுற்றுலா செல்வது என்பது ஒரு ஒரு சிறந்த தேர்வாகும்.