செய்திகள்தமிழகம்

உத்தரப் பிரதேசத்தில் தாத்தாவிற்கு உதவி செய்த 6 வயது பேரன்

முதியவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து 6 வயது பேரன், தந்தை முன்பக்க முதியவரின் மகள் இழுத்துச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ மருத்துவமனையில் வார்டு உதவியாளராக இருந்தவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் டியோரிய மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முதியவரான சிடி யாதவ் என்பவர் காயங்கள் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருடன் மகள் மற்றும் பேரன் மருத்துவமனையில் தங்கி பார்த்து வந்தனர். அங்கு மருத்துவ பரிசோதனைகளுக்கு அவரை அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு முறையும் வார்டு உதவியாளர் ரூபாய் 30 கேட்டுள்ளார்.

மருத்துவமனையில் 6 வயது சிறுவன் தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற ஆறு வயது பேரன் இந்த வயதிலும் தாத்தாவிற்கு உதவி செய்யும்.

பாசமான பேரன் பார்ப்பவரை பரவசப்படுத்தும். இந்த சிறு பையன் அனைவரது மனதிலும் ஆத்மார்த்தமான இடத்தைப் பெற்றுள்ளார். இன்றைய காலகட்டத்தில் அனைத்து பேரன்களும் இப்படியிருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

பெற்றவர்களின் பேச்சைக் கேட்காத பிள்ளைகளிடத்தில் இப்படி பாசமான பேரனை பார்ப்பது பாராட்டக்கூடிய விஷயம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *