செய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Diwali 2023: பல்லடத்தில் பசுமை தீபாவளி 2023; தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

பல்லடம் நகராட்சியில் நகர்வனம் உருவாக்குதல், தூய்மையான மற்றும் பசுமையான தீபாவளியை கொண்டாட கையெழுத்து இயக்கம், மற்றும் தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் இன்று தீபாவளி திருநாளை கொண்டாடும் வகையிலும் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையிலும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முதல் கட்டமாக நகர்வனம் உருவாக்குதல் என்ற பெயரில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வினை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பல்லடம் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இரண்டாவதாக தூய்மையான மற்றும் பசுமையான தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தனது முதல் கையெழுத்திட்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். பல்லடம் நகராட்சி ஆணையர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

இதன் தொடர்ச்சியாக பல்லடம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர், நகராட்சி ஆணையாளர், திமுக பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் அனைவருக்கும் வேட்டி, சேலை, இனிப்புகள் ஆகியவற்றை தீபாவளி பரிசு பொருட்களாக வழங்கினர். நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *