அன்பும் உறவும்ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்வாழ்க்கை முறை

ஆடி பிரதோஷத்தால் குழந்தை பாக்கியம் இதை செய்தால்…

பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வேண்டி பிரார்த்தனை செய்தால் நீங்கள் வேண்டும் மரத்தை சிவபெருமான் ஓடோடி வந்து உங்களுக்கு வர மழையாக பொழிவார் என்பது ஐதீகம். இந்த தினத்தில் நீங்கள் இறைவழிபாட்டிற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் நல்லது.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள் அப்படி நிச்சயக்கப்பட்ட திருமணத்தை வாழ்நாள் முழுவதும் சொர்க்கமாக மாற்றுவது தம்பதிகளின் வாழ்வை முழுமையாக்குவதும் குழந்தைகளே குழந்தை செல்வங்கள் இல்லாத பலரும் படும் வேதனைகளை நாம் கண்கூட பார்த்திருப்போம். என்னதான் கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லை என்றால் அத்தனை சொத்துகளும் காகிதமே. குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள். அந்த சிரிப்பை திருமணம் ஆன தம்பதிகள் காண்பதற்கு இறைவன் மனம் வைத்தால் மட்டுமே அது நிறைவேறும்.

குழந்தை பாக்கியம் பெற சிவபெருமானை வழிபடும் முறை

குழந்தை பாக்கியம் பெற சிவபெருமானின் வழிபடும் முறைகள் குறித்து பின்வருமாறு காணலாம். பிரதோஷம் என்பது சிவனுக்கு உரிய விசேஷ நாளாக கருதப்படுகிறது அதிலும் ஆடி பிரதோஷம் என்பது அம்மனும் சிவனும் சேர்ந்து வரம் அளிக்கும் திறமாக கருதப்படுகிறது எனவே அத்தகைய விசேஷ நாளில் நீங்கள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி விட்டு புத்தாடை அணிந்து உங்கள் பூஜை அறையை முழுமையாக அலங்கரித்து வாசனை திரவியங்களை கொண்டு பூஜை அறை முழுவதும் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்பு சிவபெருமானுக்கும் அம்மனுக்கும் பால் தயிர் சந்தனம் இளநீர் ஆகியவற்றை கொண்டு பூஜை செய்து தயிர் சாதம் பொங்கல் ஆகியவற்றை இறைவனுக்காக நெய்வேத்தியம் படைத்து பின்பு சிவபெருமானுக்கே உரிய விசேஷ பொருளான வில்வ இலையை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள் சிவபெருமான் மற்றும் அம்மனின் ஸ்லோகங்களை நாள் முழுவதும் விரதம் இருந்து முழுமையாக மனமுருகி படியுங்கள்.

ஒரு வில்வ இலை நம் கைகளால் சிவபெருமானின் அர்ச்சனைக்கு செல்கிறது என்றால் ஏழேழு ஜென்மத்திற்கு உரிய பாவங்களை நீக்கி நமக்கு நன்மைகளை அள்ளித் தருவார் சிவபெருமான் என்பது ஆண்டாண்டு காலமாக உள்ள நம்பிக்கை எனவே வில்வ இலை கொண்டு சிவபெருமானை வணங்குவதை மறந்து வடாதீர்கள். நாள் முழுவதும் விரதம் இருந்து ஆடி பிரதோஷ மாலை வேளையில் கோவில்களுக்கு சென்று வழிபடுங்கள். கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவலிங்கத்தை வழிபடலாம் இவ்வாறு குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் விரதம் இருந்து ஆனால் முழுவதும் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்து வர கூடிய விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *