சினிமா

எம்எஸ் தோனி ஹீரோ தற்கொலைக்கான காரணம்

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜபுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகராக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தோனியை மையமாக வைத்து சுயசரிதையாக எடுக்கப்பட்ட எம்எஸ் தோனி நடித்ததன் மூலம் அனைத்து மொழிகளிலும் பிரபலமானார்.

தோனி சிஎஸ்கேவில் இருப்பதால் தமிழ்நாட்டில் தோனிக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. தோனியை போல் நிதானமாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தமிழ்நாட்டில் நல்ல பெயர் இருந்தது. கடைசியாக மெகா ஹிட் படம் ஒன்று நடித்திருந்தார். இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகின்றது.

இந்திய திரை உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இவரது மரணம். 34 வயதில் தற்கொலை செய்துகொள்ளும் வயதா அதுவும் திறன் படைத்த நடிகர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவு எப்படி செய்தார் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த வயதிலேயே மன அழுத்தம் ஏற்படக் கூடிய அளவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் ஜூன் எட்டாம் தேதி இவருடைய மேனேஜர் திஷா தற்கொலை செய்து கொண்டார். அவரைப் போல இவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதுவாக இருந்தாலும் சுஷாந்த் சிங்போன்ற நடிகர்கள் செய்யும் இந்த அவசர முடிவு அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது. இது போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும்.

சிறுசிறு மன அழுத்தத்திற்கு தற்கொலை செய்து கொள்வது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. கடந்த ஐந்து நாட்களாக பிரஸ்ட்ரேஷன் என சொல்லப்படும் மன அழுத்தத்தால் இருந்தாராம். யாருடனும் அமர்ந்து பேசாத நிலையில் சுஷாந்த் இருந்துள்ளார்.

தோனிப் போன்றோர்கள் அவரது மரணம் கேள்விப்பட்டு அதிர்ச்சி ஆகியுள்ளனர். திறமையான நடிகர் இப்படி இளம்வயதிலேயே தீர்ந்து போய் விட்டார் அவரது ஆத்மா சாந்தியடைய திரையுலகினர் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூலம் அவருக்கான அஞ்சலி செய்தியையும் அதிர்ச்சியையும் பதிவிட்டு வந்து கொண்டுள்ளனர்.

1986 செப்டம்பர் 30ஆம் தேதி பிறந்தார் இவர் கடைசியாக நடித்த படம் மெகா ஹிட் வெற்றியை கொடுத்தது. டிவி நடிகராக புகழ்பெற்ற வந்தார். 2013ஆம் ஆண்டு அபிஷேக் கபூர் இயக்கத்தில் கை போச்சே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். சுஷாந்த் நடித்த ராப்டா, கேதார்நாத் டிரைவ், எம்எஸ் தோனி அண்டோல்டு ஸ்டோரி ஸ்டோரி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

திஷா என்பவர் இவர் மேனேஜராக பணியாற்றியவர். இவர் ஐஸ்வர்யாராய், பார்த்து சர்மா, ரியா சக்கரவர்த்தி, நடிகர் கரண் சர்மா போன்ற பிரபலங்களுக்கும் மேனேஜராக பணியாற்றியவர். ஜூன் எட்டாம் தேதி 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *