ஆன்மிகம்ஆலோசனை

ஏழரைசனியா டாப்பா இருக்க இத ஃபாலோ பண்ணுங்க.!

சனிப்பெயர்ச்சி நடப்பவர்கள் என்னென்ன செய்யலாம். எப்படி வழிபட வேண்டும்? என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 9 நவகிரகங்களில் சனி பகவான் நீதியை வழங்கக் கூடியவர். ஒருவருக்கு சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது என்றால், அதற்காக அவர்கள் பயந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

நன்மையை வாரி வழங்க

நாம் நன்மையை செய்தால் நமக்கு நன்மையையும், நாம் தீமை செய்தால் நமக்கு தீமையையும் வழங்கக்கூடியவரே சனிபகவான். நம் எண்ணங்களும், செயல்களும் நல்லதாக இருக்க வேண்டும். நம் கடமைகளை தவறாமல் செய்து வந்தாலே இந்த சனிபெயற்சி நமக்கு நன்மையை வாரி வழங்கும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள சில பூஜைகளை செய்து வந்தாலே போதும். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஆண்கள் எண்ணை வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னம், எள் கலந்த அன்னம் படைக்க வேண்டும். சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் மாலை நல்லெண்ணெய் எள் தீபம் ஏற்ற வேண்டும்.

சனி தோஷம் நீங்க

சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கும். ஆஞ்சநேயரை வழிபட்டு வரலாம். பெருமாளுக்கு நெய் தீபம், ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு வரலாம். இதனால் சனி தோஷம் பாதிப்பு குறையும். உங்களால் இயன்ற நல்ல விஷயங்களை நினைத்து அதை செயல்படுத்தினால் போதுமானது.

ஆஞ்சநேயருக்கு ஸ்ரீராம ஜெயத்தை உச்சரிக்கலாம். பெருமாளுக்குப் ஓம் நமோ நாராயணாய நமஹ என்ற மந்திரத்தை உச்சரித்து வருவது நல்லது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இதையெல்லாம் செய்து வந்தாலே சனிதோஷம் விலகும். சனி தோசம் பிடித்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

உதாரணத்திற்கு சனிபகவான் ஆஞ்சநேயரையும் பிடித்துக் கொண்ட அதே நேரம் நலனையும் பிடித்தார். சரியாகக் கால் கழுவாததன் காரணமாக நலனை பிடித்துக் கொண்டார். அதற்கு படாதபாடு பட்டார். அதே சமயம் ஆஞ்சநேயரைப் பிடித்துக் கொண்டபோது ஆஞ்சநேயரிடம் சனி பகவான் படாத பாடுபட்டார். ஏனென்றால் ஆஞ்சநேயரின் திறமையும் செயலும் அவரை விட்டு விடவில்லை. இவற்றை நாம் புத்தகங்களில் படித்திருப்போம்.

அதே போன்று தான் நாம் செய்யும் செயல்கள் நம் கர்ம வினைகளுக்கு ஏற்பவே சனிப்பெயர்ச்சி பலன்கள் அமையும். நாம் நம் எண்ணங்களும், செயலும், நல்ல. விதமாக இருக்கும் பட்சத்தில், நம் கடமைகளை தவறாமல் செய்யும் பட்சத்தில் எந்த கிரகங்களும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. என்பதை நாம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டாலே போதும்.

நமக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது. நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ? என்று நினைப்பவர்களுக்கு மேற்கூறிய வழிபாடுகளை செய்து வந்தாலே சனிப்பெயர்ச்சி ஏழரை வருடங்கள் வருகின்ற பாதிப்புகள் குறைந்து கொண்டே இருக்கும், என்பதில் எந்த ஐயமும் வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *