ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

இப்படி மீன்கள் வளர்த்தால் செல்வமழை கொட்டும்….

நாம் என்னதான் பார்த்து பார்த்து பல விஷயங்களை செய்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதில் தவறிவிடுகிறோம் வாஸ்து சாஸ்திரம் என்பது நம் வாழ்க்கையின் ஒரு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது வாஸ்து தவறினால் வாழ்க்கையே தவறி விடும் என்பர்.

அதுபோல நாம் சாதாரணமாக வீட்டில் வளர்க்கக்கூடிய மீன்களை கூட வாஸ்து சாஸ்திரப்படி வளர்த்து வந்தால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகும் செல்வம் செழிக்கும் பண வரவு அதிகரிக்கும் குடும்ப பிரச்சினைகள் தீரும். நம் வாஸ்து சாஸ்திரம் கூறும் மீன் வளர்க்கும் முறையை பின்வருமாறு பார்ப்போம்.

வாஸ்து சாஸ்திரப்படி மீன் வளர்ப்பு முறை

வாஸ்து சாஸ்திரப்படி மீன் வளர்ப்பது என்பது மிகவும் முக்கியமாகும். வீடுகளில் மீன் தொட்டி வளர்த்தால் கட்டாயமாக ஒரு சில விஷயங்களை பின்பற்றிய தீர வேண்டும். அப்படி பின்பற்றாமல் ஏதோ நாமும் நீங்கள் வளர்க்கிறோம் என்று வளர்த்தால் அதுவே உங்களுக்கு ஆபத்தாக முடியும் வீட்டில் கடன் தொல்லை அதிகரிக்கும் குடும்ப பிரச்சனை வரும். எனவே கவனமாக பின்வரும் குறிப்புகளை பார்த்து அதன்படி மேன் வளர்த்து பயன்பெறுங்கள்.

  • மீன் தொட்டியை வீட்டின் கிழக்கு வடக்கு அல்லது வடகிழக்கு வைப்பதே சிறந்த ஒன்றாகும். வாஸ்து சாஸ்திரப்படி இந்த திசைகளில் மீன் தொட்டியை வைத்து வளர்த்து வந்தால் வீட்டில் உள்ள குடும்பத்தினர் இடையே அன்பு அதிகரிக்கும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் பாசமாக இருப்பர்.
  • வீட்டின் சமையலறை மற்றும் படுக்கை அறைகளில் எக்காரணம் கொண்டும் மீன் தொட்டியை வைத்து வளர்க்கக்கூடாது அப்படி வைத்திருந்தால் உடனே அதனை வேறு இடத்திற்கு மாற்றி விடுங்கள் ஏனென்றால் இந்த அறைகளில் வைத்து மீன் வளர்க்கும் போது பணப் பிரச்சனை பண இழப்புதான் ஏற்படும்.
  • மீன் தொட்டி வைத்திருக்கும் இடம் திசை ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதுபோலவே நாம் வளர்க்கும் மீன்களின் நிறமும் மிக அவசியமான ஒன்றாகும். எட்டு மீன்கள் சிவப்பு ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களில் இருக்க வேண்டும் ஒரு மீன் கட்டாயம் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். மீன் வாங்கும் போது கவனமாக இந்த நிறங்களில் மீன்களை வாங்குவதில் தவறாதீர்கள்.
  • மீன்களை இந்த நிறங்களில் தான் வாங்க வேண்டும் என்று கூறியதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அவை என்னவென்றால் கருப்பு நிற மீனை நாம் வளர்த்து வரும் போது நம் வீட்டின் நுழையும் அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் அவை உறிஞ்சி விடும்.
  • ஒரு வேளை நாம் வளர்த்து வந்த கருப்பு மீன் இறந்து விட்டால் நம் வீட்டில் உள்ள அனைத்து விதமான எதிர்மறை எண்ணங்களையும் கருப்பு நிற மீன் தன்னுள் ஈர்த்துக் கொண்டதாக அர்த்தம் ஆகும். நிறத்தில் கூட எவ்வளவு பெரிய நன்மை பயக்கும் அர்த்தங்கள் உள்ளது
  • நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் சுட்டித்தனமாக துள்ளிக் குதித்து விளையாடும் மீன்களை வீட்டில் வளர்த்தால் .அந்த மீன்கள் நம் வீட்டில் செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

இவ்வாறு நமது வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் நீங்கள் வளர்த்து அதன் மூலம் வரும் அனைத்து நன்மைகளையும் பெறுவீர் இந்த முறையில் மீன் வளர்ப்பதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்புடன் இருக்கலாம் மகிழ்ச்சி பொங்கும் பணவரவு அதிகரிக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லை நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு பாசம் அக்கறையாகியவை அதிகரித்து ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பர்.

மேலும் படிக்க ; திருப்பாவை திருவெம்பாவை 19 ஆம் நாள் பாடல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *