விளையாட்டு

சாதனை படைத்த ஐபிஎல்..! முதல் போட்டியில் இத்தனை பார்வையாளர்களா?

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தன.

ஏனென்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு வருடமாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் விளையாட இருந்தார். அத்துடன் இவர் தனது ஓய்வை அறிவித்த பிறகு விளையாட இருந்த முதல் போட்டியாக இந்த ஐபிஎல் போட்டி இருந்தன.

விறுவிறுப்புடன் நடந்த இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பார்வையாளர்களில் புதிய சாதனை படைத்து இருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இவர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி புதிய சாதனை படைத்திருக்கிறது. பார்க் ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை இல்லாத வகையில் 20 கோடி பார்வையாளர்கள் ஐபிஎல் போட்டியை டிவி மற்றும் ஆன்லைனில் பார்ப்பதாக தெரியவந்துள்ளன.

முதல் போட்டியிலேயே இந்த அளவு பார்வையாளர்களை கொண்ட ஒரு விளையாட்டு என்பது மற்ற எந்த நாட்டிலும் எந்த ஒரு விளையாட்டு தொடருக்கும் இதுவரை இல்லாத ஒன்றாகும். இது ஒரு வரலாற்று தொடக்கம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *