வாழ்க்கை முறைவாழ்வியல்

எண்ணங்கள் சிதறுவதை தடுக்க எளிய வழிகள்

எண்ணச் சிதறல் உருவாவது ஏன்? இதன் காரணத்தை கண்டறிய வேண்டும். ஆரம்பத்திலேயே இதைக் களைய வேண்டும். அனைத்திற்கும் இது போன்ற அடுத்து என்ன என்ற எண்ணத்தை வளர்த்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உங்களுக்கு சமையல் வேலையில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும் என்றால்? புதிய ரெசிபிகள், கிச்சன் வேலைகளை கண்டறிய வேண்டும். இது பற்றி தெரிந்து கொள்ள சிறப்பு வகுப்புகளுக்கு செல்லலாம். புதிய திட்டங்களை உருவாக்கலாம்.

  • வேலையில் ஈடுபடுவது மிகவும் பிடிக்குமா?
  • புதிய திட்டங்களை உருவாக்கலாம்.
  • வருத்தத்தில் ஆழ்த்தக் கூடிய சிந்தனைகளுக்கு இடம் இருக்காது.

ரிலாக்சாக இருக்க

வருத்தத்தில் ஆழ்த்தக் கூடிய சிந்தனைகளுக்கு இடம் இருக்காது. அதிக கோபம் வரும் போது கண்களை மூடி மூச்சை இழுத்து விடுங்கள். எவ்வளவு மோசமான வளர்ச்சியாக இருந்தாலும் மூச்சை நன்றாக இழுத்து விடும்போது அந்த உணர்ச்சி கட்டுக்குள் வந்துவிடும். வசதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு கழுத்து மற்றும் தோள்பட்டை ரிலாக்சாக இருக்க வேண்டும். ஒரு கையை மார்பிலும், மற்றொரு கையை வைத்துக்கொண்டு கவனத்தை ஒருநிலைப்படுத்தி மூச்சை இழுத்து விட வேண்டும்.

அதீத சிந்தனை பிரச்சனை

இப்பயிற்சி 5 நிமிடங்கள் நாளொன்றுக்கு மூன்று முறை செய்ய வேண்டும். மன ஓட்டம் குறைந்து அதீத சிந்தனை பிரச்சனைகளை கட்டுக்குள் வரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். தியானம் செய்வதால் அனைத்து வித பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர உதவும். மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஒருவருக்கு செய்யும் உதவியானது மற்ற அனைத்து விஷயங்களையும் வேறு கோணத்தில் அதாவது நேர்மறையாக அணுக உதவுகின்றன.

மனதிற்கு ஒருவித மகிழ்ச்சி

உடல்நிலை சரியில்லாத பக்கத்து வீட்டுக்காரருக்கு காய்கறிகள் வாங்கி கொடுப்பீர்களா? சாலையில் குழந்தையுடன் செல்லும் பெண்ணுக்கு உதவி இருக்கிறீர்களா? உங்கள் வீட்டிலும் சரி, அருகில் இருப்பவர்களுக்கும் சரி, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் இந்த உதவியை நீங்கள் செய்யலாம். சிறு உதவிகள் நாள் முழுவதும் மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும். தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் உருவாவது தவிர்க்க உதவுகிறது.

உங்கள் சந்தோஷம் எங்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து அவற்றின் மீது கவனத்தை திசை திருப்புங்கள். மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, வாழ்க்கைக்கு வழிவகுக்கும் தியானம், நடனம், உடற்பயிற்சி, ஓவியம் வரைதல், இசையை கற்றல், கேட்டல் போன்றவற்றில் கவனத்தை செலுத்துங்கள். கச்சிதமாக அனைத்தும் நடக்க வேண்டுமென நினைக்க வேண்டாம். எல்லாமே நினைப்பது போல நடக்காது.

பயத்தின் மீதான அணுகு முறை

நம்மால் முடிந்த சிறந்ததை கொடுத்து இருக்கிறோம் என்ற எண்ணத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பயத்தின் மீதான அணுகு முறையை மாற்ற வேண்டும். கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் ஏற்படும் பயம் அல்லது புதிதாக ஒரு விஷயத்தை காலடி வைக்க ஏற்படும் பயம். தோல்வி குறித்த பயம் ஆகியவற்றை களைய முற்பட வேண்டும்.

ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்

எப்போதுமே வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே எதையும் தொடங்க வேண்டாம். உங்களுக்கான சிறந்த ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள். தான் சிறந்தவனாக விளங்க வில்லை என்ற எண்ணமே அதீத சிந்தனையை தூண்டிவிடும். கடின உழைப்பை மட்டுமே கருத்தில் கொண்டால் தேவையில்லாத சிந்தனைகள் மனதில் இடம் பெறாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *