செய்திகள்தமிழகம்

வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இந்த நாட்களில் மட்டும் குறிப்பிட்ட பகுதிகளில் வங்கிகள் இயங்காது என தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பதற்றமான வக்கூச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி தேர்தல் நடைபெறும் நாளன்று , அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் இயக்க மாநில தேர்தல் அணையம் தடை விதித்துள்ளது. அதேபோல், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை
என தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்படும் என வாங்கியாளர்கள் குழுமம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *