ஆலோசனைஉளவியல்ஜோதிடம்

ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்டம் தரும் ரத்தினங்கள்…

ஜாதகம், ஜோதிடம் ஆகியவை அனைத்தும் மனிதன் தோன்றும் போதே அவனுடன் சேர்ந்து தோன்றி விட்டது. மனிதர்களுக்குள் இருக்கும் உயிர் காந்தம் என்பது இயற்கையால் உருவானது. மனிதனின் ஜாதகரீதியான தோஷங்களையும் உடல் ரீதியான குறைகளையும் நிவர்த்தி செய்து அவனது வாழ்வில் வெற்றி பெற அதிர்ஷ்டத்தையும் வாழ்வில் முன்னேற நல்ல வழிகளையும் பெற்று தருவது அவனது ஜாதக ரீதியான ரத்தினங்கள் ஆகும். இது ஏதோ இன்று விளம்பரத்திற்காக கூறுபவை அல்ல மூடநம்பிக்கையும் அல்ல. நம் கலாச்சாரப்படி முந்தைய காலத்தில் இருந்தே ராஜாக்களும், தேவர்களும் மன்னர்களும் கூட இந்த ரத்தினங்களை அணிந்து வந்துள்ளனர்.

ரத்தினங்களின் அதிர்ஷ்டம்

ரத்தினங்களின் அதிர்ஷ்டத்தாலே அவர்கள் பல வெற்றிகளையும் புகழையும் பெற்றதாக அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ரத்தினங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை மட்டுமல்ல மருத்துவ ரீதியாகவும் நமக்கு பல நன்மைகளை செய்கிறது.

நமது ராசிக்கு ஏற்றவாறு நாம் ரத்தின கற்களை அமைந்துள்ள போது நம் உடலில் உள்ள நோய்கள் கூட நீங்கும் மருந்தாக அது செயல்படுகிறது. இவ்வளவு நன்மைகள் வாய்ந்த மகத்துவமான ரத்தின கற்கள் ஒவ்வொரு ராசிக்கு தகுந்தாற்போல் உள்ளது . எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கற்கள் அணிய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்ப்போம். ஜாதக ரீதியாக உங்கள் ராசிக்கு உண்டான கற்களை அணிந்து வாழ்வில் பல வெற்றிகளை பெற இது உதவியாக இருக்கும்.

மேஷம் – பவளம்

மேஷ ராசிக்காரர்களுக்கு அணிய வேண்டியதை பவளமாகும் பவளத்தை அணிவதன் மூலம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். கோபம் தணியும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

ரிஷபம் – வைரம்

ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை வைரம் ஆகும். வைரத்தை இவர்கள் அணிவதன் மூலம் வசீகரத் தன்மை உண்டாகும். எதிலும் யோகத்தை கொடுக்கும். வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கி கொடுக்கும்.

மிதுனம் – மரகதம்

மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை மரகதம் ஆகும். மரகத கல்லை இந்த ராசிக்காரர்கள் அணிவதன் மூலம் செய்யும் தொழில் முன்னேற்றம் அடையும் விருத்தி உண்டாகும். எந்த தொழில் தொடங்கினாலும் அதில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

கடகம் – முத்து

கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை முத்து ஆகும். இதனை கடக ராசி காரர்கள் அணிவதன் மூலம் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி உண்டாகும் குடும்ப பிரச்சினை இல்லாமல் அமைதியான முறையில் வாழ்க்கை அமையும். இதன் மூலம் வீட்டில் செல்வம் செழிக்கும். செல்வ வளத்துடன் வாழ்க்கை முழுவதும் வளமாக வாழ்வீர்.

சிம்மம் – மாணிக்கம்

சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை மாணிக்கம் ஆகும். மாணிக்கத்தை அணிவதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் என்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இவர்கள் எதை தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும் இதனாலையே இவர்கள் அதிர்ஷ்டக்காரர்களாக அனைவரின் மத்தியில் திகழ்வர்.

கன்னி – மரகதம்

கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை மரகதம் ஆகும். மரகதக்கல்லை இந்த ராசிக்காரர்கள் அணிவதன் மூலம் தொழிலில் விரித்தி ஏற்படும். வாழ்வில் நீங்கள் எதை தொடங்கினாலும் உங்களுடன் அதிர்ஷ்டம் எப்போதும் இருக்கும். வாழ்க்கை இன்பமாக அமைதியாக இருக்கும்.

துலாம் – வைரம்

துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை வைரம் ஆகும். வைரத்தை அணிவதன் மூலம் இவர்களுக்கு வாழ்வில் என்றும் யோகம் இருக்கும் எதை தொடங்கினாலும் இவர்களின் யோகத்தின் மூலம் அவை நன்மைகளையே முடியும். மேலும் வசீகர தன்மையை கொடுக்கும். உங்களின் வசீகரத்தால் அனைவரையும் உங்கள் வசம் மாற்ற முடியும்.

விருச்சிகம் – பவளம்

விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை பவளமாகும். இதை அணிவதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி கடாட்சம், தெய்வ அருள் கிடைக்கும். தெய்வம் இருக்கும் வீட்டில் என்றும் மங்களகரமான காரியங்களே நடக்கும். கோபம் தணியும். குடும்பத்தில் பிரச்சனைகள் குறைந்து அமைதியான வாழ்க்கை வாழ்வீர்.

தனுசு – கனக புஷ்பராகம்

தனுசு ராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் என்ற கல்லை அணிவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும் இந்த கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.இதை அணிவதன் மூலம் இவர்களுக்கு மன அமைதி உண்டாகும்.வாழ்வில் ஒரு தெளிவு கிடைக்கும். வீடு செல்வம் செழித்து வளமுடன் வாழ்வர்.

மகரம் – நீலக்கல்

மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை நீலக்கல் ஆகும். இந்த நீலக்கல் தெய்வீக தன்மை உடையது இதனை அணிவதன் மூலம் தெய்வ கடாட்சம் உண்டாகும். வாழ்வில் மிகுந்த செல்வாக்கை கொடுக்கும். பண கஷ்டத்தால் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

கும்பம் – நீலக்கல்

கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை நீலக்கல் ஆகும். மங்களம் நிறைந்த இந்த கல்லை அணிவதன் மூலம் செல்வ விருத்தி ஏற்படும். வாழ்வில் மிகுந்த செல்வந்தர்களாக காணப்படுவீர்கள். தெய்வீக தன்மை உண்டாகும். ராஜ வாழ்க்கை வாழ்வீர்.

மீனம் – கனக புஷ்பராகம்

மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியவை கனக புஷ்பராகம் ஆகும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கல்லை அணிவதன் மூலம் செல்வ விருத்தி ஏற்படும். மங்களம் நிறைந்த இந்த கல்லை அணிவதால் மன அமைதி ஏற்படும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காரியமும் நல்லதாகவே நடக்கும்.

மேலும் படிக்க ; மகாளய அமாவாசை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *