சினிமா

மேயாதமான் நாயகியை கண்டு கொந்தளிக்கும் ரசிகர்கள்

மிருகங்களை கொஞ்சி விளையாடும் ப்ரியா பவானி சங்கர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கி பின் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு தடம் பதித்தார். வைபவ்வுடம் மேயாதமான், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ் ஜே சூர்யாவுடன் மாண்க்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா அத்தியாயம் 1 போன்ற படங்கள் இவர் நடித்து வெளியானவை.

தற்போது ப்ரியா பவானி சங்கருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளன. அதில் முக்கியமானது உலகநாயகன் கமலஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். சென்னை வாசியாக இருக்கும் இவர் பக்காவாக தமிழ் பேசிக் கொண்டு அருமையாக நடிக்கிறார்.

சமீபத்தில் வந்த ப்ரியா பவானி சங்கர் நடித்துக் கொண்டிருக்கும் டாஃப் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்‌.

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். 29 ஜூன் நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் மிருகங்களுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரு புகைப்படத்தில் இரண்டு குரங்குகளுடன் கேண்டிடாக போஸ் கொடுத்துள்ளார். அதில் ஒரு குரங்கு பின்னாலிருந்து பிரியா பவானி சங்கரை கட்டித் தழுவியது போலும் மற்றொன்றை ப்ரியா பவனி சங்கர் தூக்கிக் கொஞ்ச அந்த குரங்கும் கொஞ்சுகிறது.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே அனல் பறக்கும் ஆவேசம் பறக்கிறது. பெரும்பாலானோர் தாம் இருக்க வேண்டிய இடத்தில் அந்த குரங்குகள் இருக்கின்றனவே என்று கொந்தளித்து உள்ளனர்.

மற்றொரு புகைப்படத்தில் ஒரு குட்டி புலியை தூக்கி கொஞ்சுகிறார் ப்ரியா பவானி சங்கர். புகைப்படம் க்யூட்டாக உள்ளது. புகைப்படம் மட்டுமல்லாமல் புகைப்படத்தில் உள்ளவர்களும் க்யூட்டாக உள்ளனர்.

பாவம் ரசிகர்களின் நிலைமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *