Audioசினிமா

எம்எஸ் தோனி ஹீரோ மரணம் தோனி ரசிகர் ஆதங்கம்….

சுஷாந்த் ராஜ்புத் சிங் மரணம் கேட்டு தோனியை தெரிந்த ரசிகர்கள் அனைவரும் ஆதங்கத்தில் உள்ளனர். ஒரு சிறப்பு மிக்க ஊக்குவிப்பு இன்ஸ்பரேசன் கதையில் நடித்துவிட்டு எப்படி இவர் இந்த முடிவை எடுத்தார் என்பதை அந்த இளைஞர் நமக்கு அனுப்பிய செய்தி மூலம் அறியலாம்.

மறைந்த இந்தி திரைப்பட நடிகர் சுஷாந் சிங் ராஜ்புத் அவரின் தற்கொலை செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் அவர் நடித்த எம் எஸ் தோனி அண்ட்டோல்டு ஸ்டோரி எனும் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. மேலும் அத்திரைப்படத்தில் தோனியின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக நடித்திருந்தார் அதுவும் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட அவரை தோனி போலவே பாவித்து சில ரசிகர்களும் உண்டு.

தோனி போன்ற மாபெரும் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து, பல இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்த தன்னம்பிக்கை கொடுத்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் தோனியின் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தோனி ரசிகர்களின் ஆதங்கம்

தோனியின் சரித்திர வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த ஹீரோ தற்கொலை செய்து கொள்வது ஒரு கொலை செயலாகும் சிறிய காரணங்களுக்காக மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டால் இந்த கொரானா காலத்தில் சாதாரண மனிதனுடைய மனநிலையை சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எதுவாகினும் தற்கொலை என்பது ஒரு தீர்வாக முடியாது.

வாழ்க்கையை எதிர் நீச்சல் போட கற்றுக்கொள்ள கொடுத்த தோனியின் படத்தில் நடித்த ஹீரோ இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது தோனி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது/ இதுபோன்று இனிவரும் காலங்களில் நடக்காதவாறு நடிகர்களும் தங்களை மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்களைத் தங்கள் நடிப்பின் மூலம் கவர்ந்திழுப்பது மட்டுமின்றி அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழவும் வாழவும் நடிகர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *