சின்னத்திரை

ஆதிகுணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் அப்பத்தா எதிர்நீச்சல்

தமிழகத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் மிகவும் பிரபலமாக உள்ளது. தமிழகம் எங்கும் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி வருகின்றது. சீரியலுக்கு என்று ப்ரைம் டைம் இருக்கும் அந்த பிரைம் டைமில் எதிர்நீச்சல் சீரியல் முக்கிய பங்கு வகிக்கின்றது. விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா இதே நேரத்தில் வருகின்றது என்பது குறிப்பிடதக்கது ஆகும்.

சிண்டு முடிக்கும் சீரியல்கள் மக்கள் எதிர்ப்பு அலை

சீரியல் என்றாலே சிண்டு முடிப்பவை என தமிழ்த்தில் வாதங்கள் வந்தன, அந்த அளவுக்கு தமிழக சீரியல்கள் பல அமைதியான வஞ்சக, பொறாமை, போட்டி, வன்முறைகளை குடும்பத்தில் தூவி வந்தன. சீரிய்ல்கள் பல, வீட்டில் சிக்கல் குழப்பங்களை கலாச்சார சீர்கேடுகளை புகுத்தி வருவதாக ஆளாளுக்கு செட்டு போட்டு பேசிக் கொண்டிருந்த வேலையில், அப்படியெல்லாம் இல்லை சீரியலுக்கு என்று தனி கெத்து இருக்கின்றது என்பதை இயக்குனர் திருச்செல்வம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு எதிரான பல நடைமுறைகளை எதிர்த்து ஏற்கனவே கோலங்களில் ஆறு வருடம் வெற்றிகரமாக பல புரட்சி கருத்துக்களை மீண்டும் மக்களுக்கு நினைவு படுத்தி சீரியலில் புகுத்தி ஒரு புதுமை படைத்தார் திருச்செல்வம்.

திரிபு இல்லாத திருச்செல்வம்

இந்த முறையும் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி தற்போதும் வழக்கில் இருக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை அழகாக அப்பட்டமாக தெளிவாக சீரியல் மூலம் படம் எடுத்துக் காட்டி இருக்கின்றார்.
எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் ஆண் ஆதிக்கத்திற்கும் தான் கர்வம் படித்தவன் என்னும் அகங்காரத்திற்கும் தலைவனாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி தேர்ந்த முறையில் அதை படம் எடுத்துக் காட்டி இருக்கின்றார்.

ஆத்திரம் வர வைக்கும் ஆதி

ஆதி கதாபாத்திரம் நம்மிடம் பல சீர்கேடுகளை பேசி வருகின்றது. ஆம் ஆதி குணசேகரன் சொத்துபத்துக்கள் மீது ஆசை கொண்ட பேராசை கொண்ட அண்ணன் ஆகும் நடித்து வருகின்றார். அவருக்கு தேவை எல்லாம் சொத்து மட்டும் தான் அந்த சொத்துக்காக ஏற்கனவே இரண்டு தம்பிகளை அடி மாடுகளாக வைத்து அவரது மனைவி பிள்ளைகளை கொத்தடிமைகளாக வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றார்.

மேலும் படிக்க ; கவலையில் அழகு சீரியல் ரசிகர்கள்

சொத்துக்காக தங்கை வாழ்க்கையில் சதிராடும் ஆதி

ஆதி சொத்துக்காக தன் தங்கையை தகுதி என்பது சுத்தமாக இல்லாத கரிகாலனுக்கு மணமுடிக்க பேசி முடித்து விட்டார். மறைமுகமாக அதற்கான காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, ஆதி தாயார் மனமாற்றத்திலிருந்து சீரியல் சீரியஸாக நகரும் வேகம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஜனனியின் தெளிவான போக்கு

ஜனனியின் தெளிவான போக்கு என்பது இன்றைய கால பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அதேபோல அவசர புத்திகளாக பெண் புத்தி சிலருக்கு இருக்கும் என்பதை சீரியல் வீட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் கடந்த இரண்டு நாட்களில் அப்பத்தாவை பேசிய விதத்தில் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஆதிகுணசேகரனை தோலுரிக்கும் அப்பத்தா

ஆதி குணசேகரனை எஸ்கேஆர் வீட்டில் சென்று பேசி வருமாறு அப்பத்தா தெரிவிக்க, ‘ஆமா தங்கை ஆசைப்பட்டு விட்டாள். அவளுக்காக செய்ய வேண்டும்’ என்று நடிப்பு கொடி பிடிக்கும் ஆதி குணசேகரன். அதை மறைத்து 40% சொத்துக்காக ஒத்துக்கிட்ட என உண்மையை அடித்து கூறும் அப்பத்தா என அருமையாக நகர்கின்றது.

ஆதி குணசேகரன் சொத்துக்காக வேடமிட்டாலும் அது வேகாது என்பதை அப்பத்தாவின் கண்கள் மற்றும் நடை அவரது முக பாவனைகள் தெளிவாக தெரிவிக்கின்றன. நமது ஆடியன்ஸ்களுக்கெல்லாம் எப்போ என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றது. யார் என்ன செய்தாலும் சொன்னாலும் ஆதிரையின் திருமணம் அவள் விரும்பிய எஸ்கேஆர்யின் தம்பி அருணுடன் நடக்கும் என்பது தெளிவாக திருச்செல்வம் இயக்கத்தில் தெரிந்து விடுகின்றது.

எதிர்நீச்சல் நமக்கு உணர்த்தும் பாடங்கள்

வாழ்வில் நாம் நினைப்பதெல்லாம் உடனடியாக கிடைத்து விடுமா, அதற்கு பல இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும் என்பதை இந்த காட்சி தெளிவுபடுத்தி இருக்கின்றது. அடுத்த அடுத்த வரும் ப்ரோமோக்களின் மூலம் நாம் இன்னும் பல சுவாரசியமான மனிதப் போக்குகளை ஆதி குணசேகரன் அவரது செயல்பாட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆதி குணசேகரன் ஆக நடித்திருக்கும் மகேஷ் அவர்கள் மிகவும் சிறப்பான தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கின்றார். சில சமயம் பலர் அவரை கடிந்து கொள்கின்றனர். உண்மையில் அது நடிப்பு என்பது கொஞ்சம் லேட்டா தான் புரியுது சார் அந்த அளவுக்கு நடிப்பில் ஒரு தீவிரத் தன்மை தெரிகின்றது.

மேலும் படிக்க : சுதந்திர தின வாழ்த்துக்களுடன் குட் லக் சகி டீசர் ரிலீஸ்

ஜனனி தான் ஒரு படித்த தெளிவான பெண் என்பதை ஒவ்வொரு முறையும் ஸ்கிரீனில் காட்டி வருகின்றார். பல படித்த பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. படித்துவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக இருக்கக் கூடாது தெளிவான முடிவுகள் எடுக்க தடுமாறக்கூடாது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக ரேணுகா மற்றும் நந்தினி செயல்பாடுகள் நமக்கு பாடம் புகுத்துகின்றன. இந்த சீரியல்ல நிறைய கத்துக்கணும் போல இருக்குப்பா வெயிட் பண்ணி பார்ப்போம் அடுத்த என்ன நடக்குன்னு.

விமர்சனம்

புதுயுகபாரதிசோபனா

வளர்மதி (வளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *