ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சத்துமிக்க எள்ளு உருண்டை

சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவு எள்ளு. நல்லெண்ணெய் இதில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்தே எள்ளு முக்கியத்துவம் தெரியும். பூப்பெய்திய பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களிலும், கர்ப்பிணிகளுக்கும் எள்ளு மிகவும் ஏற்றது. எள்ளை உணவில் எப்படி சேர்த்துக் கொள்வது. எள்ளு பொடியாகவோ வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிடலாம்.

  • சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவு எள்ளு.
  • பூப்பெய்திய பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களிலும், கர்ப்பிணிகளுக்கும் எள்ளு மிகவும் ஏற்றது.
  • எள்ளு பொடியாகவோ வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிடலாம்.

எள்ளு உருண்டை

தேவையான பொருட்கள்

200 கிராம் எள்ளு, 75 கிராம் வேர்க்கடலை, 150 கிராம் வெல்லம், ஏலக்காய் 7, நெய் 3 ஸ்பூன்.

செய்முறை விளக்கம்

ஒரு வாணலியில் நிலக்கடலை போட்டு சிறிது நேரம் வறுக்கவும். பிறகு இதை தோல் நீக்கி எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எள்ளு கொட்டி சிறிது நேரம் வறுக்கவும். ஒரு மிக்ஸி ஜார் எடுத்து ஈரமில்லாமல் காய வைத்து இதில் முதலில் எள்ளை போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

இதனுடன் நில வேர்க்கடலை சேர்த்து மீண்டும் இரண்டு சுற்று சுற்றி பிறகு ஏலக்காய் சேர்த்து சுற்றவும். கடைசியாக பொடித்த வெல்லத்தைப் மிக்ஸியில் போட்டு அதை சிறிது நேரம் அரைத்து எடுத்து இதனுடன் நெய் கலந்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாரம் வரை இந்த உருண்டைகளை வைத்து சாப்பிடலாம். வேர்க்கடலை, ஏலக்காய், நெய் கலந்து பிசைந்து செய்ததால் வாசனை தூக்கலாக இருக்கும். எள்ளு பிடிக்காதவர்களுக்கும் இந்த எள்ளு உருண்டை விரும்பி சாப்பிடுவார்கள்.

நிலக்கடலை சேர்த்ததால் மனம் நன்றாக இருக்கும். இதை வீட்டிலேயே எளிதாக செய்து உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள். விரும்பி உண்ணுவார்கள். கடைகளில் 6 உருண்டை முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்குவதை விட வீட்டிலேயே எளிதாக செய்து அனைவரும் நிறைவாக சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *