டிஎன்பிஎஸ்சி

தேசிய வளர்ச்சி திட்டங்கள் அடங்கிய பொருளாதார ஹைலைட்ஸ் பகுதி 5!

போட்டி தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற பொது அறிவு  பாடங்கள் மிகமுக்கியமானது. இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், அது கடந்து வந்த சவாலான பாதைகள் பொருளாதார பாடமாக நமக்கு அமைந்துள்ளது. என்னதான் பொதுஅறிவு பாடமாக  அமைந்தாலும் நாம் சார்ந்த தேசியத்தின் பொருளாதாரம், அடிப்படை வளம், கட்டமைப்பு, வளர்ச்சிப் பற்றி  தெரிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். 

தேசிய வளர்ச்சி கழகம்:
திட்ட குழுவினால் உருவாக்கப்படும் அனைத்து திட்டங்களும் தேசிய மேம்பாட்டு குழுவினால் அங்கீகரிக்கப்படும்.
மத்திய மாநில அரசுகள் மற்றும் திட்டக்குழு ஆகியவற்றுக்கிடையே பலதரப்பட்ட திட்டமிடலை மேம்படுத்த மேலும் இவற்றின் ஒத்துழைப்புகளை பெருக்க உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய வளர்ச்சி கழகமானது ஆலோசனை அமைப்பாகும். இது  அரசியல் அமைப்பு மற்றும் சட்ட பூர்வமான அமைப்பாக செயல்படுவதில்லை.

தேசிய வளர்ச்சிக் கழகத்தால் முதல் ஐந்தாண்டு திட்டமானது உருவாக்கப்பட்டது

1952 ஆகஸ்ட் 6ஆம் தேதி உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் தலைவராக பிரதமர் செயல்பட்டார் மற்ற உறுப்பினர்கள் மத்திய கேபினட் அமைச்சர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்கள் மற்றும் மாநிலங்களின் ஆளுநர்கள் ஆகியோரைக் கொண்டு இயங்குகின்றது.

மாநில திட்டக் குழுக்கள்:
மாநிலத்தின் உயர்ந்த திட்டமிடும் அமைப்பாக விளங்குவது மாநில திட்டக்குழு ஆகும். முதலமைச்சரை தலைவராகவும் நிதி மற்றும் திட்ட அமைச்சர் அத்துடன் சில தொழிலாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டது.

மாவட்ட திட்ட குழுவானது மாநில திட்டக் குழுவுக்கு அடுத்து செயல்படும் அமைப்பாகும் இது அரசு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் அல்லாதவரையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

ஐந்தாண்டு திட்டங்கள்:

முதல் ஐந்தாண்டு திட்டம் 195 -1956 ஹாரோடு தோமர் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் ஐந்தாண்டு திட்டம் உருவாக்கப்பட்டது.
அத்துடன் சமூகத்திற்கான முன்னேற்ற திட்டங்களையும் 1952-இல் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் பொருளாதாரத்தை சரிசெய்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இந்தியா சில சிக்கல்களை மேற்கொண்டது. அவற்றில் முக்கியமாக அகதிகளின் வருகை மேலும் மக்கள் தொகை அதிகம் காரணமாக உணவு தட்டுப்பாடு மற்றும் உயரும் பண வீக்கத்தை சரி செய்ய சவாலான சூழலை எதிர்கொண்டது.

இதனால் உருவாக்கப்படும் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவாகவும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு சென்று அதன்மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்துவதும் இதன் முக்கிய கடமையாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட சவால்களை முதல் ஐந்தாண்டு திட்டத்திலிருந்து சரிசெய்ய முயன்றது.

வேளாண்மை, விலை நிலைப்புத்தன்மை, மின்சாரம், போக்குவரத்து போன்றவற்றின் தேவை மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுத்தப்பட்டது.

முதல் ஐந்தாண்டு திட்டத்தின் கடைசி இரண்டு வருடங்கள் அறுவடை அதிகமாக கிடைத்ததுடன் முதல் ஐந்தாண்டு திட்டமானது வெற்றிகரமாக அமைந்தது.

இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 1956 முதல் 1961

இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் மஹாலா நோபிஸ் திட்டம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை பொறுத்தவரை பொருளாதாரத்தின் நிலைப்புத்தன்மை கவனிக்கப்பட்டது. முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சியை அடுத்து, தொழில் துறையில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் துரிதமான தொழில்மயமாக்கல் சாலைகள் சீரமைத்தல், இரும்பு ஸ்டீல், உரத் தொழிற்சாலைகள், கனரக பொறியியல் மற்றும் இயந்திர கட்டுமானத் தொழிற்சாலைகள் போன்றவைகள் அதிகரித்துக் காணப்பட்டன.
1986இல் தொழிற் கொள்கை உருவாக்கப்பட்டது.

பொதுத்துறை நிறுவனங்கள் சமூக கட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தின் குறிக்கோளை அடைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் இறக்குமதியினால் ஏற்படும் பணத்தட்டுப்பாடு, வெளிநாடுகளில் கடன் பெறும் நிலை ஆகியவற்றினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக தொழில்துறை இருந்தது.
இக்காலகட்டத்தில் ரூர்கேலா, பிலாய், துர்காபூர் ஆகிய நகரங்களில் இரும்பு ஆலைகள் உருவாக்கப்பட்டன.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் 1961 முதல் 1969 வரை

மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் புதிதான கொள்கையையும் எண்ணங்களையும் கொண்டு செயல்படும் நோக்கத்தில் இருந்தது.

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருந்தது. இந்தியாவை தற்சார்பு பொருளாதாரமாக மாற்றும் குறிக்கோளை கொண்டு செயல்பட்டது.

விவசாயத்திற்கு முதன்மை தன்மை, ஏற்றுமதி மற்றும் தொழில் வளத்திற்கு வாய்ப்பும் கொடுக்க நோக்கம் கொண்டு இருந்தது மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்.

மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவிற்கு என அதிக அளவில் வெளிநாட்டு கடன் கிடைத்தது. ஆனால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. எதிர்பாராமல் 1962 ஆம் ஆண்டு ஏற்பட்ட சீனாவின் படையெடுப்பு,  மேலும் 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர், மேலும் 1965 இல் ஏற்பட்ட பஞ்சம் ஆனது இந்திய பொருளாதாரத்தை நிலை குலைத்தது.

ஆண்டுத் திட்டங்கள் 1966 – 1969

இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார அசாதாரண சூழல்களை சமாளிக்கவும். சரியான கட்டமைப்பு இல்லாத சூழலில் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டது.
அதின் மூலம் வேளாண்மை தட்டுப்பாட்டை சமாளித்து செயல்படுத்தப்பட்டது. பசுமை புரட்சி உருவாக்கப்பட்டது.

பசுமைப் புரட்சியின் மூலமாக விளைச்சல் தரும் விதைகள், உயர்தர உரங்கள், நீர் பாசனம் இருக்கும் மண் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் வேளாண்மை தட்டுப்பாட்டை குறைத்து  பொருளாதார வளர்ச்சியை  வேளாண்மை வளர்ச்சி  மூலம்  உண்டாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மூன்றாவது மூன்று ஆண்டு திட்டங்கள் மூலம் வேளாண்மை பொருள் அதிகரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அந்தத் திட்டங்களின் மூலம் பொருளாதார சரிவை கவனமுடன் மேம்படுத்தப் பட்டது

நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969- 1974

நான்காம் ஐந்தாண்டு திட்டத்தில் தேசிய வளர்ச்சி மற்றும் விவசாயத்தின் வளர்ச்சி மீண்டும் தொடங்கி செயல்பட திட்டமிடப்பட்டது.

நான்காம் ஐந்தாண்டு திட்டம் இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்றது. மூன்றாம் ஆண்டில் பருவமழை பொய்ப்பு காரணமாக எதிர்பார்த்த லாபம் பெற முடியவில்லை.

1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போருக்குப்பின் பங்களாதேஷில் இருந்து வரும் அகதிகள் குறித்த சிக்கலை சமாளிக்க இந்தியா மெனக்கெட வேண்டி இருந்தது.

ஐந்தாவது ஐந்து ஆண்டு திட்டம் 1974- 1978

இத்திட்டத்தின்படி வறுமை ஒழிப்பு தன்னிறைவு அடைதல் இதன் குறிக்கோளாக இருந்தது. அதிக விலை உயர்வு சமாளிக்க வருமானம் பெருக்குதல் உள்நாட்டு சேமிப்பு அதிகரித்தல் போன்ற கொள்கையைக் கொண்டு இருந்தது.

ஆரம்பக்கல்வி, குடிநீர், மருத்துவ வசதி, கிராமங்களில் உணவு, அனைவருக்கும் வீட்டு வசதி அளித்தல், கிராமப்புற சாலைகளை சீரமைக்க, வீடு, நிலம், கிராமங்களுக்கு மின்சாரம் தருதல் நகரத்தை தூய்மைப்படுத்துதல் போன்ற திட்டங்களை ஐந்தாண்டு திட்டம் செயல்பட முனைந்தது.

ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் காலம் முடியும் முன்பே அது1978 இல் நீக்கப்பட்டது.1979ஆம் ஆண்டு ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தது.

சுழற்சி திட்டங்கள் 1978-1980

இந்தியாவின் சுழற்சி திட்டமானது ஜப்பான் மாதிரியை போன்று வடிவமைக்கப்பட்டது.

ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் ஜனதா அரசினால் 1978 முதல் 1983 வரை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இரண்டு வருடங்கள் மட்டுமே நிலைத்து நின்றது.

மீண்டும் ஆயிரத்து 1980 ஆம் ஆண்டு ஆறாவது ஐந்தாண்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.

விவசாயம் தொடர்பான துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழிற்சாலையை பெருக்கவும், நுகர்பொருள் உற்பத்தி அதிகரித்து குறைந்த வருமானம் பெறுபவர்களின் தேவையை நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *